அவ்வாறு வாடகை மூலம் வரும் வருமானம் அவர்களின் மொத்த வருமானத்தில் ஒரு பகுதியாகும். எனவே அதற்கேற்ப அந்த வருமானத்திற்கு வரி கணக்கிடப்படுகிறது.
அதாவது வெளிநாட்டில் வாழும் ஒரு இந்தியர், இந்தியாவில் இருக்கும் தனது வீட்டில் இருந்து வரும் வாடகை மூலம் ரூ.2 லட்சமும், இதர மூலங்கள் மூலம் ரூ.2 லட்சமும் வருமானம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தான் மொத்தமாக ஈட்டும் ரூ.4 லட்சத்திற்கும் சேர்த்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் அவர் பெறும் வாடகை அவருடைய என்.ஆர்.ஓ. வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும். அவருடைய என்.ஆர்.இ. கணக்கில் செலுத்தப்படக் கூடாது. ஒரு வேளை வாடகையை செலுத்துபவர் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக இருந்து அவர் என்.ஆர்.இ. வங்கிக் கணக்கு வைத்திருந்தால் அந்த கணக்கில் செலுத்தலாம்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாடகை மூலம் பெறும் வருமானத்திற்கு அவர்கள் வசிக்கும் நாடுகளில் வரி செலுத்த வேண்டுமா?
ஆம். அதற்கான வாய்ப்பு உண்டு. பல நாடுகள் தங்கள் மக்களிடமிருந்து அவர்கள் உலக அளவில் பெறும் வருமானத்திற்கு வரி வசூல் செய்கிறது. ஆனால் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர், அவர் வாழும் நாடானது இந்தியாவுடன் டபுள் டாக்சேஷன் அவாய்டன்ஸ் அக்ரீமென்ட் (டிடிஏஏ) ட்ரீட்டி வைத்திருந்தால், வாடகை மூலம் பெறும் வருமானத்திற்கு அவர் அந்த நாட்டிற்கு வரி செலுத்த தேவையில்லை.
டிடிஏஏ ஒப்பந்தம் என்றால் ஒருவர் ஏற்கனவே தனது தாய்நாட்டிற்கு வரி செலுத்துகிறார் என்று பொருள். எனவே அவர் தனது தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளில் வசிக்கும் போது அந்த நாட்டிற்கு அவர் வாடகை மூலம் பெறும் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை.
உதாரணமாக, இந்தியாவும் அமெரிக்காவும் இந்த டிடிஏஏ ஒப்பந்தத்தை வைத்திருக்கின்றன. எனவே அமெரிக்காவில் வாழும் ஒரு இந்தியர், அந்த நாட்டில் வரி செலுத்துவதற்காக தனது வருமானத்தை ஃபைல் செய்யும் போது, தான் வாடகை மூலம் இந்தியாவில் பெறும் வருமானத்திற்கு, வரி விலக்கு வேண்டி விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு வாடகை மூலம் பெறும் வருமானத்திற்கு இந்தியாவில் வரி செலுத்த வேண்டும். ஏனெனில் அவருடைய சொத்து இந்தியாவில் இருக்கிறது. அந்த சொத்திலிருந்து வாடகை பெறுகிறார் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.