கடனுக்கான விண்ணப்பத்தை உங்களுடைய பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு எண்ணை மேற்கோள் காட்டி, மேலாளரின் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அந்த விண்ணப்பத்தில் எப்பொழுது கடன் தொகையை திரும்பச் செலுத்துவீர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். மேலும், இதற்கு முன்னர் நீங்கள் பெற்ற கடன் மற்றும் அதை திரும்பச் செலுத்திய வரலாறு போன்றவற்றை குறிப்பிட வேண்டும். உங்களுடைய பற்றுவரவு புத்தகம் அதனுடன் இணைக்கப்பட்டு , உங்களுடைய விண்ணப்ப படிவத்தில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். உங்களுக்கு ஒரு பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை தொடங்க வெறும் ரூ 100 மட்டுமே போதும் என்பது தெரியுமா?.
இந்த பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கை சம்பளம் பெறும் அல்லது சுய வேலை செய்யும் தனிநபர்கள் ரூ 100 முதலீடாகக் கொண்டு தொடங்கலாம். இந்த கணக்கை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) அல்லது அதனுடன் தொடர்புடைய பிற வங்கிகளின் கிளைகளில் திறக்கலாம்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளான பாங்க் ஆப் பரோடா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, மற்றும் பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகளும் இந்த சேவையை வழங்குகின்றன. பொது அஞ்சலகமும் இத்தகைய சேவையை வழங்குகிறது. தனிநபர்கள் சிறு குழந்தையின் சார்பாக அவர்களின் பாதுகாவலராக இருந்து பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை தொடங்கலாம். இப்போது, நீங்கள் ஆன்லைன் மூலமக பணத்தை கட்டும் வசதி வந்து விட்டது. எனவே, நீங்கள் வங்கிகள் அல்லது அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.