வீட்டுக் கடன் வாங்கும் போது, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையும் சேர்த்து எடுக்க வேண்டும் என்று நீங்கள் கட்டாயப்படுத்தப்பட்டால், நீங்கள் அதை மறுக்க முழு உரிமை உங்களுக்கு உண்டு.
அதோடு நீங்கள் வீட்டுக் கடனுக்காக விண்ணப்பிக்கும் போதே, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை எடுக்கப் போவதில்லை என்று எழுத்துப் பூர்வமாக நீங்கள் தெரிவித்து விடலாம்.
எப்போதுமே ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் நன்மைகள் உண்டு
வீட்டுக் கடன் வாங்கும் போது நீங்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையும் எடுத்தால் அதற்கு எப்போதுமே பலன் உண்டு. அதாவது நீங்கள் வீட்டுக் கடன் வாங்கிய பின்பு, உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழந்தால், நீங்கள் எடுத்திருக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டம் மூலம் உங்கள் குடும்பத்தார், நீங்கள் வாங்கிய வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்.
வீட்டுக் கடன் வழங்கும் பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், நீங்கள் வாங்கும் வீட்டுக் கடனுக்கு பாதுகாப்பு மற்றும் உத்திரவாதத்தை எதிர்பார்க்கின்றன. வீட்டுக் கடனுக்கான பாதுகாப்பு மற்றும் உத்திரவாதத்தை உங்கள் வீடு வழங்கிவிடுகிறது. நீங்கள் வாங்கும் வீட்டுக் கடனுக்கு புதிய பாதுகாப்போ அல்லது உத்திரவாதமோ தேவைப்படுவதில்லை.
ஒருவேளை ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை எடுக்க விரும்பினால், அது வாங்கும் வீட்டு கடன் தொகையைப் பொருத்து அமையும். எனினும் ஒரு சில காப்பீட்டு நிறுவனங்கள் நீங்கள் வாங்கும் வீட்டுக் கடனை மட்டும் கவர் செய்யும் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகின்றன.
ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை எடுக்க விரும்பினால், நீங்கள் வாங்கும் வீட்டுக் கடனை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தையும் சேர்த்து கவர் செய்யும் திட்டத்தை வாங்குவது சிறந்ததாக இருக்கும்.