எல்.ஐ.சி ஜீவன் ஸரள் என்பது ஒரு என்டோவ்மென்ட் உத்திரவாதத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில், பாலிசிதாரருக்கு, பிரீமியம் செலுத்தும் அளவு மற்றும் செலுத்தும் முறையை தேர்வு செய்யும் வசதி உள்ளது.
இந்த திட்டம், பிற காப்பீட்டுத் திட்டங்களைப் போன்று பாலிசிதாரருக்கு, பாலிசி காலம் முழுவதும், இறப்பு போன்றவைக்கு எதிராக நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. உறுதியளிக்கப்பட்ட முதிர்வு தொகை, பாலிசி காலம் முடிவடைந்த உடன் பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கால நெகிழ்வு தன்மையையும், பண நீர்மைத்தன்மையும் பாலிசிதாரர்களுக்கு வழங்குகிறது.
பிரிமியம்
எல்.ஐ.சியின் பிற காப்பீட்டு திட்டங்களைப் போன்று ஜீவன் ஸரளுக்கும் மதாந்திர, காலாண்டு, அரையாண்டு, மற்றும் ஆண்டு பிரீமியம் செலுத்தும் வசதி உள்ளது.
சலுகை
இது லாபத்தை நோக்கமாக கொண்ட திட்டம் ஆகும். இந்த திட்டம் வணிக நிறுவனங்களின் ஆயுள் காப்பீடு திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அதன் லாபத்தில் பங்கு கொள்கிறது. இந்த திட்டம் சலுகையாக லாபத்தில் ஒரு பங்கை பாலிசிதாரர்களுக்கு அதன் முதிர்வு தொகையுடன் சேர்ந்து வழங்குகிறது. அந்த சலுகையை பெற அந்த நிறுவனத்தின் வயதைப் பொறுத்து குறைந்தது 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.
திரும்பபெறுதல்
ஜீவன் ஸரள் 4 வது ஆண்டு முதல் பாலிசியின் ஒரு பகுதியை திரும்பபெறுவதற்கு அனுமதி அளிக்கிறது. ஆனால் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அந்த நிபந்தனைகளைப் பற்றி அறிய பாலிசி ஆவணத்தை சரி பார்க்கவும்.
ஜீவன் ஸரள் பிற என்டோவ்மென்ட் திட்டங்களைப் போன்றதே. காப்பீட்டு ஆலோசகர்கள் எப்பொழுதுமே டெம் பாலிசியை பரிந்துரைத்து வந்திருக்கிறார்கள். ஏனெனில் டெம் பாலிசிக்கள் என்டோவ்மென்ட் திட்டங்களை விட அதிக பாதுகாப்பை தருகிறது. அதுவே பாதுகாப்பான வழியாகும்.