ஒவ்வொரு மாதமும் வீட்டுகடன் தவணையை அடைக்க சிரமப்படுபவர்களுக்கு, எஸ்.பி.ஐ மேக்ஸ்கெயின்(SBI Maxgain) என்ற திட்டம் பயனுள்ளதாக இருக்கும். உங்களிடம் அதிக கையிருப்பு இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால், இந்த திட்டத்தை பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் கட்டும் வட்டி சுமையை குறைக்கலாம்.
வட்டி சுமை குறைக்க மற்றும் ஒவ்வொரு மாதமும் அதிக பணம் கட்ட நினைத்தால் எஸ்.பி.ஐ. மேக்ஸ்கெயின் தான் சிறந்த தேர்வு.
திட்டத்தின் செயல்பாடு
எஸ்.பி.ஐ. மேக்ஸ்கெயின் திட்டத்தின் கீழ் நீங்கள் வீட்டுக்கடன் வாங்கியிருந்தால், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடன் தொகைக்கு ஈடாக மேல்வரைப்பற்று (ஓவர்டிராப்ட்) தொகையை உங்களுக்கு அளிக்கும். இந்த கணக்கில் எப்போதெல்லாம் அதிக பணத்தை வரவு வைக்கிறீர்களோ, அந்த பணம் கடனை திருப்பிச் செலுத்தும் பணமாக எடுத்துக் கொள்ளப்படும். இதனால் வட்டி சுமை குறையும்.
உதாரணம்
எஸ்.பி.ஐ மேக்ஸ்கெயின் திட்டத்தின் கீழ் கட்ட வேண்டிய நிலுவை கடன் தொகை 15 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது எஸ்.பி.ஐ மேக்ஸ்கெயின் கணக்கில் 2 லட்சம் இருந்தால், அது கடனுக்கான வரவாக எடுத்துக் கொள்ளப்படும். இதனால் வட்டி சுமை குறையும். மேலும் இது நடப்பு கணக்காக (கரண்ட் அக்கௌன்ட்) இருப்பதால், காசோலை ஏடு, ஏ.டி.எம் மற்றும் டெபிட் கார்டு, இனையதளத்தில் வங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வசதிகளும் அளிக்கப்படும்.
வட்டி விகிதம்
எஸ்.பி.ஐ பொதுவாக வீட்டுக்கடனுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை விட எஸ்.பி.ஐ மேக்ஸ்கெயின் திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம் தான். இன்றைய நிலவரப்படி வீட்டுகடனுக்கு எஸ்.பி.ஐ 9.95% மிதவை வட்டி வசூல் செய்கிறது. இதுவே மேக்ஸ்கெயின் திட்டம் என்றால் 0.25% அதிகமாக வட்டி வசூலிக்கிறது. இது கடன் தொகை ஒரு கோடிக்கு கீழ் இருந்தால் தான். எஸ்.பி.ஐ மேக்ஸ்கெயின் திட்டத்தில் குறைந்தபட்சமாக ஐந்து லட்சம் கடன் தரப்படும். அதிகபட்ச கடன் தொகைக்கு எந்த வரைமுறையும் இல்லை.
செயல்முறை கட்டணம்
எஸ்.பி.ஐ வாங்கும் அதே செயல்முறை கட்டணத்தை தான் எஸ்.பி.ஐ. மேக்ஸ்கெயின் திட்டமும் வாங்குகிறது.