சீட்டு எவ்வாறு வேலை செய்கிறது?தனிநபர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்து, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுடைய பங்களிப்பு அளிப்பார்கள். அவர்களில் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக ஏலமிட்ட தேதியில் பெறுவார்.
உதாரணமாக இப்போது சுமார் 10 உறுப்பினர்கள் உள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். அந்த சீட்டின் மொத்த கால அளவு சுமார் 10 மாதங்கள் இருக்க வேண்டும். தற்பொழுது ஒர்வொரு உறுப்பினரும் சுமார் 1000 ரூபாயை தங்களுடைய பங்களிப்பாக செலுத்துகிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஒரு நபருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றால், அவர் ஒரு குறைந்த விகித ஏல தொகைக்கு ஏலம் எடுப்பார். உதாரணமாக மேலே கூறப்பட்ட வழக்கில் ஏல தொகை ரூ 10,000 (10 உறுப்பினர்கள் X ரூ 1000 = ரூ 10000) அல்லது அதற்கு குறைந்த அளவாக இருக்க வேண்டும். ஒரு சில நபர்களுக்கு அவசர பண தேவை இருக்கலாம் என்பதால் ஏலத்தின் முதல் மாதத்தில் ரூ 10000 க்கு பதில் ரூ 9000 க்கு ஏலம் எடுக்கலாம்.
அவ்வாறு ஏலம் போகும் விஷயத்தில், ஒவ்வொரு உறுப்பினரும் ரூ 1000 க்கு பதில் ரூ 900 மட்டுமே செலுத்த வேண்டும் . ஏனெனில் இந்த மாதத்திற்கு ஏலம் எடுத்த நபர் தனது அவசர தேவையின் காரணமாக ரூ 10000க்கு பதில் ரூ 9000 க்கே ஏலம் எடுத்தார். ஆகவே மீதம் உள்ள ரூ 1000 உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும். ஆரம்ப காலத்தில் ஏலம் எடுக்காததால் பிற நபர்கள் தள்ளுபடியை சீட்டின் நன்மையாக அனுபவிக்கிறார்கள்.
சீட்டு நிதிகள் பெரும்பாலும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் சில சீட்டு நிறுவனங்கள் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. கர்நாடகாவில் இது சீட்டு நிதி (கர்நாடகா) விதிகள் 1983 ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன. கேரளாவில், சீட்டு நிறுவனங்கள் கேரளா சீட்டு சட்டம் 1975 மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இதேபோல், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, புது தில்லி போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களால் சீட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. கேரளா மாநிலத்தில் கேரள மாநில நிதி நிறுவனங்கள் லிமிடெட் என்கிற மாநில அரசுக்கு சொந்தமான அரசு நிறுவனம், சீட்டுகளை நடத்தி வருகிறது. இது வேறு சில மாநிலங்களுக்கும் பொருந்தும்.