தங்கமா அல்லது ஈக்விட்டியா- எது சிறந்தது?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் ஈக்விட்டிக்களுக்கு பதிலாக தங்கத்தில் அதிக பணத்தை முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். தங்கம் பல வருட காலமாக ஒரு நிகரற்ற முதலீடாக விளங்கி வந்துள்ளது என்று சுட்டிக்காடும் சிலர், அதன் நீண்ட கால நல்வாய்ப்பை ஒப்பிடுகையில் தற்போதைய சரிவை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் சிலரோ, தங்கத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்து விட்டதாகக் கூறுகின்றனர்.

பென் பெர்னான்கே, அவருடைய பத்திரிக்கையாளர் கூட்டத்தின் போது, ஒரு மாதத்தில் சுமார் 85 பில்லியன் டாலர் டிரெஷரி அசிஸ்டன்ஸ் அளிக்கும் குவான்டிட்டேட்டிவ் ஈஸிங் ப்ரொக்ராம் 2013 ஆம் வருட இறுதியில் நிறுத்தப்படக்கூடும் என்று அறிவித்துள்ளதைத் தொடர்ந்து சந்தைகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. தங்கம் மற்றும் ஈக்விட்டி மாற்றகங்களைப் பொறுத்தவரையில், பயம் கலந்த விற்பனை தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் இவற்றுள் எது சிறந்தது என்று தீர்மானிப்பது மிகவும் சிக்கலானதாகும். இவற்றுள் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில், நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில தகவல்கள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன.

(Gold rates in India on July 8)

தங்கத்தின் உன்மை நிலை

தங்கத்தின் உன்மை நிலை

உண்மையில் முதலீடுகளைப் பொறுத்த வரையில், கடந்த 12 ஆண்டுகளாக, முன்னணியில் இருந்து வந்த தங்கம் 2013 ஆம் ஆண்டு வரையில் முதலீட்டாளர்களின் கண்ணின் மணியாய் இருந்துள்ளது. ஆனால் பொருளாதார நெருக்கடியின் அறைகூவல்களுக்குப் பின் முதலீட்டாளர்கள் தங்கத்தில் பிராஃபிட்களை புக் செய்துள்ளனர். உலகின் மிகப்பெரும் இடிஎஃப் ஃபண்ட் நிறுவனமான எஸ்பிடிஆர் கூட 1000 டன்கள் வரையிலான வரலாறு காணா சரிவைச் சந்தித்துள்ளது. இவ்வருடத்தில் எஸ்பிடிஆர் ஹோல்டிங்குகள் சுமார் 37 சதவீதத்துக்கும் மேலாக சரிவடைந்துள்ளன.

பிராஃபிட் புக்கிங்கில்

பிராஃபிட் புக்கிங்கில்

சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் தங்க இறக்குமதி வேரூன்ற ஆரம்பித்துள்ளது. எனினும், அதிகரிக்கும் விலைகள் மற்றும் ரூபாய் மதிப்பின் சரிவு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியவர்களான, தங்கத்தை வாங்கும் நுகர்வோர்கள் தான் எவ்வாறாயினும் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில், சர்வதேச விலைகள் பலத்த அடி வாங்கியிருப்பதனால், முதலீட்டாளர்கள் இப்போதும் பிராஃபிட் புக்கிங்கில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தங்க இருப்பின் அனுகூலங்களைக் குறைக்கக்கூடியதாய் உள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு
 

இந்திய ரூபாயின் மதிப்பு

இந்திய ரூபாய் இது வரை காணாத அளவில் சுமார் 60.7 வரை குறைந்துள்ளது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தங்க இறக்குமதி சமநிலையை பாதித்து, விலையேற்றத்திற்கு வழிவகுக்கிறது. இந்நிலையில், இந்திய கரன்ட் அக்கவுன்ட் குறைபாடுகள் அரசின் நிலையை கவலைக்கிடமாக்கியுள்ளது. மேலும், தங்க இறக்குமதிகளின் மீதான அதீத அடக்குமுறைகளும் தவிர்க்க இயலாதவையாய் உள்ளன.

ஈக்விட்டிகளின் நன்மை

ஈக்விட்டிகளின் நன்மை

இந்திய ஈக்விட்டிகள் கடினமானதொரு துறையாகக் கருதப்படுகின்றன. மேக்ரோ மட்டத்தில் காணப்படும் இந்த தொய்வு இத்தகைய மந்தமான செயலாக்கத்தின் காரணியாகும். யு.எஸ். டோவ் ஜோன்ஸுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கையில், வர்த்தக வட்டியானது யு.எஸ். இன்டெக்ஸ் மற்றும் டாலருக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதையும், இந்தியா போன்றதொரு வளரும் நாட்டின் சந்தை, அதனுடைய சொந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருவதையும் காணலாம்.

இந்திய முதலீட்டு

இந்திய முதலீட்டு

உற்பத்தித்திறன், முதலீடுகள், அதீத பணவீக்கம் மற்றும் கிரீன் ஃபீல்டு செயல்திட்டங்கள் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகள், இந்திய முதலீட்டு சுழற்சியை குறைவாக்கி உள்ளன. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்குப் பின் ஃபாரீன் இன்ஸ்ட்டிட்யூஷனல் இன்வெஸ்டர்ஸ் (எஃப்ஐஐ'ஸ்) கூட போட்ட பணத்தை பறித்துக் கொண்டு விட்டது.

இறுதி அறைகூவல்

இறுதி அறைகூவல்

இந்த சந்தர்ப்பத்தில், ஈக்விட்டி சந்தைகளே பெரும் அபிமானத்துக்கு உரியவையாய் தோன்றுகின்றன. இனி வரும் மாதங்களில், நல்ல பங்குகளின் மதிப்பு, கட்டாயமாக பன்மடங்கு பெருகும் என்பதில் சந்தேகம் இல்லை. குறைந்த கால வாய்ப்புகள் ஏதேனும் இருப்பின், நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்;

 

 

ரூபாயின் விளைவுகள்

ரூபாயின் விளைவுகள்

சீன சந்தைகளின் மந்தநிலை மற்றும் அவர்களின் தங்க உபயோகம் ஆகியவை புல்லியன்களுக்கான தேவையையும் கீழிறங்கச் செய்துள்ளன. இவ்வருடத்தில் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்குப் பின்னும் தங்க விலையில் பயங்கர இறக்கத்தைச் சந்தித்துள்ள இந்தியா, ரூபாயின் மதிப்பு உயரும் தறுவாயில், தங்கத்தின் விலையில் மேலும் பல சிக்கல்களைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

பங்கு சந்தையில் நம்பிக்கையூட்டும் விஷயம்

பங்கு சந்தையில் நம்பிக்கையூட்டும் விஷயம்

1. யு.எஸ். ஈக்விட்டிகளின் உயர்வு ஏனைய சந்தைகளிலும் அத்தகைய ஒரு நம்பிக்கை உணர்வைப் பரவச் செய்யும்.

2. மிக அதிகமான பங்குகளை வைத்திருப்பதனால், சீனா தற்சமயம் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

3. இந்திய சந்தைகள் பல மாத விலைக்குறைப்புகளைக் கொண்டிருக்கும் இச்சமயம், சிறப்பான தள்ளுபடி விலைகளில் பொருட்களை வாங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

 

 

ஈக்விட்டி

ஈக்விட்டி

ஈக்விட்டிகளைப் பொறுத்தவரை, ஸ்டாக் பிக்கிங்கில் கவனமாகத் தேர்ந்தெடுத்தல் அவசியம், ஆனால் செர்ரி பிக்கிங் தான் நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியது. பெர்னான்கே, தான் க்யூஇ (QE) அஜெண்டாவை சுத்தமாக ஒழிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold Vs Equities – Which is Better?

As gold prices continue to fall, investors are in a dilemma whether to allocate more money to gold in place of equities. Some are pointing that Gold has been an outperformer over the years and its recent slide can be ignored looking at the long term prospects while some suggest that it is game over for Gold.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X