அமெரிக்க அரசின் தற்காலிகமான வேலைநிறுத்தத்தால் கடந்த செவ்வாய் மற்றும் வியாழன் அன்று இந்தியப் பங்குச்சந்தைகள் பெரும் ஏற்றத்தைச் சந்தித்தது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதனன்று விடுமுறை.
இதனால் பங்கு முதலீட்டார்களும் நிறுவனங்களும் அதிகப் பணயம் செய்வதாகவும், இந்த தற்காலிகமான வேலைநிறுத்தம் இந்திய பங்குச்சந்தைகளுக்கு நல்ல செய்தி என்றும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். மேலும், இந்தச் செய்தி அமெரிக்க ஜிடிபியை பெரிதும் பாதிக்கும் என்றும் அதன் விளைவு பொருளாதார வெளிப்பாடாக ஒரு நாளுக்கு 300 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்றும் விவாதிக்கிறார்கள். அமெரிக்கவின் ஜிடிபி சரிவால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது சொத்துடைமை வாங்கும் திட்டத்தைக் கைவிடப்போவதில்லை.
சொத்துடமை திட்டம்
அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக அமெரிக்க பெடரல் ஒரு மாதத்திற்கு 85 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துடமையை வாங்குகிறது.
இந்தியப் பங்குச்சந்தை
இந்த சொத்துடைமை வாங்கும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணம் இந்தியப் பங்குச்சந்தையை வந்தடையும். இப்பொழுது இருக்கும் நிலையில், அமெரிக்க அரசு தனது சொத்துடைமை வாங்கும் திட்டத்தை நிறுத்தும்பணி தாமதம் ஆகும் வாய்ப்பு உள்ளதால், இந்தியப் பங்குச்சந்தைகள் பெரும் லாபம் அடையும்.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய்!!
இந்த நிலவரத்தை தொடர்ந்து, டாலரின் மதிப்பு மற்ற நாணயங்களையும் , நமது இந்திய ரூபாயையும் சேர்த்து ஒப்பிடும்போது குறையத்தொடங்கி உள்ளது. இன்று காலை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61.65 வில் முடிவடைந்தது.
நல்ல செய்தி
இந்த மாத இறுதியில், அமெரிக்க அரசின் சொத்துடைமை வாங்கும் திட்டம் குறைக்கப்படுமோ என்ற அச்சம் நிலவி வந்தது. தற்போதிய வேலை நிறுத்தத்தால், அமெரிக்க GDP சரியும் பொருட்டு இந்த திட்டம் குறைக்கப்பட வாய்ப்பு இல்லை. இது, இந்தியப் பங்குச்சந்தைகளுக்கும் ரூபாயின் மதிப்பிற்கும் நல்ல செய்தி.
இந்திய வர்த்தக சந்தை
ஆனால் ,இந்த வேலைநிறுத்தம் மேலும் நீடித்தால் , அது மற்ற பங்குச்சந்தைகளையும் இந்தியாவையும் பெரிதும் பாதிக்கும்.