மும்பை: விமானக் கட்டணங்கள் வெகுவாக உயர்ந்தபோதும் விழாக்காலத்தை முன்னிட்டு அக்டோபர் மாதத்தில் விமானப் போக்குவரத்து 10 சதவிதம் வரை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 45 லட்சத்தை ஒப்பிடும்போது இவ்வருடம் 50 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர் என வான்வழி போக்குவரத்து இயக்குனரகம் திங்கள் கிழமையன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமான போக்குவரத்து சந்தையில் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்கு 18.4 சதவிதமாகவும், ஜெட் ஏர்வேசின் பங்கு 18.4 சதவிதமாகவும் இருக்கிறது.
குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் விமான போக்குவரத்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தின. இண்டிகோ 30.2 சதவிதமும், ஸ்பைஸ் ஜெட் 20 சதவிதமும், கோ ஏர் 7.7 சதவிதமும், ஜெட் கனெக்ட் 5.4 சதவிதமும் பங்கை பெற்றிருந்தன.
விஜயவாடாவை சேர்ந்த உள்ளூர் நிறுவனமான ஏர் கோஸ்டா தன் முதன் மாத செயல்பாடுகளில் 0.1 சதவித சந்தையை கைபெற்றது.