Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
சென்னை: நாட்டின் மிகப்பெரிய பொது துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது உள்நாட்டு வர்த்தகத்தின் ஜனவரி- மார்ச் மாத காலண்டிற்கான முன்கூட்டிய வரியாக ரூ.1,456 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.1450 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது.
அதேபோல் தனியார் வங்கியான யெஸ் வங்கி இதே காலண்டிற்கான முன்கூட்டிய வரியாக 300 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இவ்வங்கி இதை காலகட்டத்தில் செலுத்திய 167 கோடியை ஒப்பிடுகையில் 33 சதவிகிதம் அதிகம்.
முன்கூட்டிய வரி செலுத்துகை முறை, செலுத்த வேண்டிய வருமான வரியை நான்கு காலாண்டுகளாகப் பிரித்து செலுத்துவதாகும். இத்தகைய வரி ஒரு வர்த்தக நிறுவனத்தின் செயலாற்றலை குறிக்கும் அளவீடாகவும் கருதப்படுகிறது.
பொருளாதார மந்த நிலையின் காரணமாக வங்கித் துறை செயல்பாடுகள் கேள்விக் குறியாகியிருக்கும் நிலையில், வங்கியின் நிதி ஆதார தரத்தினையும் வளர்ச்சியினையும் பாதிக்கும்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary