சென்னை: ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமாக விளங்குவது மக்களிடம் இருந்து பெறப்படும் வரி தான். ஆனால் இங்க பல பேர் வேண்டும் என்ற வரிகளை அரசிற்கு செலுத்துவதில்லை. இதனால் என்ன ஆகும்??
நீங்க வேண்டும் என்றே வரி கட்டவில்லை என்றாலோ, மறந்துவிட்டாலோ, எதுவாக இருந்தாலும் அதற்கான விளைவுகள் ஒன்றாகதான் இருக்கும். உங்களுக்கு வருமான வரித் துறையில் இருந்து நோட்டீஸ் வருவதோடு மட்டுமல்லாமல் அதனைத் தொடர்ந்து அபராதங்களும் ஏன் சிறைத் தண்டனைகளும் கூட வரலாம்.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை |வங்கி IFSC குறியீடு
பெரும்பாலும் நடப்பில் உள்ள அல்லது நிலுவையில் உள்ள ஒரு வரி தொடர்பான பிரச்சனை குறித்த விவரங்களையும் ஆவணங்களையும் கேட்டு உங்களுக்கு அறிவிப்பு அல்லது நோட்டீஸ் வரலாம். இந்த பிரிவின் கீழ் அறிவிப்பைத் தருவதன் மூலம் ஒரு வருமான வரி ஆய்வு அதிகாரி உங்களை நேரில் அழைத்து பின் வரும் விவரங்களைப் பற்றி விசாரிக்க முடியும். ஒருவருடைய வருமானம் அல்லது அவர் கடமைப்பட்டுள்ள வேறொருவருடைய வருமானம் குறித்த வருமான விவரங்களை சரியான நேரத்திற்குள் அல்லது அந்த வருட முடிவிற்குள் தாக்கல் செய்யாமல் இருத்தல் அல்லது முற்றிலுமாக செய்யாமலே விடுதல் ஆகிய காரணங்களுக்காக விவரங்களைப் பெறுவதற்கு வருமானத்துறை உங்களை நேரில் அழைக்கப்படலாம். வருமான வரிச் சட்டத்தின் படி வரி வித்திப்பினை ஆய்வு செய்யத் தேவையான காரணங்களையோ அல்லது கணக்கு அல்லது ஆவணங்களையோ ஒருவரிடமிருந்து பெறுவதற்கும் அழைக்கப்படலாம். வரி விதிப்புத் தொடர்பாக வரி செலுத்துபவரின் எழுத்து மூலமான ஒப்புதல் அல்லது விளக்கம் பெறுதல். இந்த நோட்டீசை கவனக்குறைவாக எடுத்துக்கொள்ளாமல் சற்று முக்கியத்துவம் அளித்து தேவையான விவரங்களையும் ஆவணங்களையும் வரி ஆய்வு அதிகாரிக்கு அளிப்பது அவசியம். நீங்கள் தண்டனை, அபராதம் அல்லது ஏழு வருடம் வரையிலான சிறைத் தண்டனை ஆகியவற்றிற்கு ஆளாக நேரிடலாம். உங்களுக்கு விதிமீறல் பற்றிய அறிவிப்பு கிடைத்தவுடன் அதனை முக்கியத்துவம் அளித்து வரி ஆதிகாரியுடன் தொடர்புகொண்டு நீங்கள் வரி விவரங்கள் தாக்கல் செய்யாததற்குக் காரணம் என்ன என்பதி விளக்க வேண்டியது அவசியம். சட்டபூர்வமான தண்டன பிரிவு 276சிசி படி முன்பே சொல்லப்பட்டதைப் போல் கடுமையானதாகவும் சிறைத் தண்டனை ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் இருக்கும். உங்களுடைய வரி விவரங்களை தாக்கல் செய்ய தாமதித்திருந்தால், நீங்கள் உங்கள் பழைய நட்டங்களை அடுத்து வரும் ஆண்டில் கணக்கில் கொண்டுவர அனுமதி கிடையாது. எடுத்துக்காட்டாக நீங்கள் பங்கு வர்த்தகத்தில் 25000 ரூபாய் நட்டமடைந்திருந்தால், அடுத்த வருட இலாபங்களில் அதனைக் கழித்துக்கொள்ள வழி இருக்கிறது. ஆனால் நீங்கள் விவரங்களை அளிக்க தாமதமாகியிருந்தால் அல்லது நீங்கள் வரி விவரம் தாக்கல் செய்யாமலே இருந்தால் இந்த சலுகையை நீங்கள் பெற முடியாமல் போவதோடு முதலீட்டு ஆதாயங்களின் மீதான வரியை செலுத்தியாகவேண்டும். உங்களுடைய வரி விவரங்களை தாக்கல் செய்வதில் தாமதம் இருந்தால், அதற்காக ரூபாய் 5000 அபராதமாக வசூலிக்கப்படும். எனவே அதற்குத் தயாராக இருங்கள்.வருமானவரிச் சட்டம் பிரிவு 142 (1) இன் படி நோட்டீஸ்
நேரம் காலம் இரண்டுமே அவசியம்
ஆய்வுகள்
விளக்க கடிதம்
தண்டனை
முந்தைய நட்டங்களை கணக்கில் கொண்டுவர முடியாது
அபராத விதிப்பு