சென்னை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மோசடி காசோலைகளை தடுப்பதற்காக ஸ்டாப் பேமெண்ட் வசதியை அளிக்கிறது. இதனை பயன்படுத்தி உங்கள் கணக்கில் போலியான மற்றும் முறைகேடான காசோலை பரிமாற்றங்களை தடுக்க முடியும்.
இந்த சேவையைக்காக கோரும் முன் உங்கள் கணக்கில் எந்த விதமான காசோலையும் வங்கியில் சமர்ப்பிக்கவில்லை என்பதை நீங்கள் உறுதி செய்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஸ்டாப் பேமெண்ட் சேவை பெற்றும் பயன் இல்லாமல் போய்விடும்.
மேலும் இத்தகைய சேவையை அனைத்து வங்கிகளும் தனது வாடிக்கையாளருக்கு வழங்கிவருகிறது. இதற்கான கட்டணங்களும் விதிக்கப்பட உள்ளது. அதுமட்டும் அல்லாமல் வங்கிகளுக்கு மத்தியில் இதற்கான கட்டணங்கள் மாறுப்படும்.
இச்சேவையை பெற முதலில் நீங்கள் இணையதள வங்கி சேவையை பெற வேண்டும், இல்லையெனில் வங்கிக்கு நேரடியாக சென்று பெற வேண்டும்.
சரி இணையதள சேவையின் எப்படி இச்சேவையை பெறுவது என்பதை இங்கு பார்போம்.
1. முதலில் ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பாங்கிங் தளத்திற்கு செல்லவும்.
2. உங்களின் தனிப்பட்ட வாடிக்கையாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு உள்ளே செல்லவும்.
3. உள்ளே சென்ற பின் "e-services" என டாப்பை கிளிக் செய்யவும்.
4. இதில் "Stop Payment" என்ற பட்டைனை தட்டவும்.
5. இப்பக்கத்தில் நீங்க நிறுத்த வேண்டிய பரிமாற்றத்தின் காசோலையின் தகவல்களான, காசோலை எண், தேதி, காசோலையில் குறிப்பிட்ட பெயர் ஆகியவற்றை பதிவிடவும்.
6. பின்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஒப்புதல் செய்து.
7. சப்மிட் பட்டணை அழுத்தவும்.
8. வேலை முடிந்தது.