சென்னை: இந்தியாவில் ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறும் நபர்கள், தங்களது வருமான வரியை இ-தாக்கல் (E-Filing) முறையில் செலுத்த வருமான வரித்துறை (CBDT) கட்டாயமாக்கியுள்ளது.
இந்நிலையில் வருமான வரி இணைய மூலம் தாக்கல் செய்யும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். மேலும் சிக்கல் இல்லாத செயலாக்கத்திற்குச் சில விதிகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
எனவே இணையம் மூலம் வருமான வரியைத் தாக்கல் செய்யும் போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய சிலவற்றை இங்குப் பார்ப்போம்.
10% பேர் தவறு செய்கின்றனர்!
மத்திய வருமான வரித்துறையின் புள்ளி விபரங்களின் படி கிட்டத்தட்ட 10% பேர் இணையத் தாக்கலுக்குப் பின் ITR V முதல் CPC படிவங்களை இத்துறைக்கு அனுப்ப மறந்துவிடுகின்றனர்.
முக்கிய விபரங்கள்
உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்கள் சரியாகப் பதிவிடப்பட்டு உள்ளதா, சரியான (சமீபத்திய) முகவரி, வங்கி கணக்கு, எம்.ஐ.சி.ஆர் ஆகியவை நிரப்பப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.
வரி வரவுகள்
படிவம் 26ஏ.எஸ். / என்.டி.எஸ்.எல். வலைத்தளங்களில் உள்ள வரி வரவுகள் வரி விதிப்புக்குரியவர் சரிபார்க்க வேண்டும். தவறான வரி கணக்கீடு நடப்பதற்கு மிகப்பெரிய ஒற்றைக் காரணமாக அமைவது சிறு தவறுகளே.
வரவுகள் அல்லாதவை கண்டறியப்பட்டவுடன் டி.டி.எஸ். டிடக்டர் மற்றும் / அல்லது வங்கியாளரிடம் எடுத்துச் செல்லப்படும்.
பெயர்
நீங்கள் பதிவிட்டுள்ள பெயர் நிரந்தரக் கணக்கு எண் தகவலுடன் பொருத்த வேண்டும். வருமான வருத்தாக்கலில் இது மிக முக்கியப் பங்கு வகுக்கிறது. மேலும் இதுவே முதல் படி.
பிறந்த தேதி
இங்கு ஏற்படும் தவறுகளால் மூத்த குடிமக்கள் வழக்கில் அதிக வரி கணக்கீடு ஏற்படும். எனவே சரியான தகவல்கள் அளிப்பதன் மூலம் தேவையற்ற தாமதம் மற்றும் குளறுபடிகளை நீங்கள் தவிர்க்கலாம்.
முகவரி
ஹவுஸ் / பிளாட், சிட்டி, பின்கோடு போன்றவை அவசியம். நிரப்பப்படாதவற்றில் பணத்தைத் திரும்ப வழங்குவதில் தாமதம் ஏற்படும்.
மின்னஞ்சல் முகவரி
விண்ணப்பதாரர் தங்களது மின்னஞ்சல் முகவரியைச் சரியாக நிரப்பப்பட வேண்டும். ஏனென்றால் விருமான வரித்துறையிடம் இருந்து உங்கள் கணக்குக் குறித்துப் பல முக்கிய விபரங்கள் உங்களுக்கு வரும்.
கைப்பேசி
முழுக் கைப்பேசி எண்ணையும் +91 பயன்பாடு இல்லாமல் உள்ளிட வேண்டும். SMS சார்ந்த தொடர்புக்கு இது இன்றியமையாததாக உள்ளது.
பாலினம்
நிரந்தரக் கணக்கு எண் தகவல் பொருந்த வேண்டும் இல்லையெனில் கணக்கீட்டில் தவறு ஏற்படும்.
வாழுமிட பற்றிய நிலை
என்.ஓ.ஆர் அல்லது என்.ஆர்.ஐ.-யின் நிலையைப் பொருந்துகின்ற இடத்தில் மட்டுமே குறிப்பிட வேண்டும். அதற்குக் காரணம், இந்தியாவில் வசிக்கும் வரி விதிப்புக்குரியவருக்குக் கிடைக்கும் குறிப்பிட்ட சில பயன்களைப் பெறும் தகுதி அவர்களுக்கு இருப்பதில்லை.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..