வீட்டுக் கடன் திட்டத்தில் உங்கள் பணத்தை இப்படியும் சேமிக்கலாம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஒவ்வொருவருடைய வாழ்விலும் வீடு என்பது ஒரு அடிப்படை வசதி என்பதுடன் ஒரு வீட்டைச் சொந்தமாக்குவது பொதுவாக அனைவரின் கனவுகளிலும் ஒன்று.

 

நம்முடைய நிதிநிலைகள் பலமாக இல்லாத நேரங்களில் வீட்டுக் கடன்கள் நம் சொந்த வீட்டுக் கனவை நனவாக்க உதவுகின்றன. இன்றைய நிலையில் வீட்டுக்கடன் வாங்குவது எளிதாகிவிட்டாலும், இதனைத் திருப்பிச் செலுத்துவதில் நம்முடைய கஷ்டம் நமக்குத் தான் தெரியும்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் வீட்டுக்கடனை எப்படிச் செலுத்தினால், பணத்தைச் சேமிக்க முடியும் என்பதை அறிவுறுத்தவே இந்தக் கட்டுரை.

வீட்டுக் கடனும்.. வங்கிகளும்..

வீட்டுக் கடனும்.. வங்கிகளும்..

இந்நாளில் பெரும்பாலான வங்கிகள் பல்வேறு விதமான வீட்டுக் கடன் திட்டங்களில் மக்களைக் கவரும் விதமாக அவர்களின் வீட்டுக் கனவை பூர்த்திச் செய்ய வழங்குகின்றன. அவை ஒருபுறம் கனவாக இருந்தாலும் சரியான நேரத்தில் திரும்பச் செலுத்த முடியாத பட்சத்தில் வீட்டுக்கடன்கள் ஒரு மிகப்பெரிய சுமையை நம் மீது சுமத்துகின்றன.

நிலையான வட்டி வகிதம்..

நிலையான வட்டி வகிதம்..

வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தும் நடைமுறையை எளிதாக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கி ஆகியவை வங்கிகளுக்கு மாறும் தன்மையுடைய வட்டி வீதத்தை (Floating Intrest rates) விளக்கிக் கொள்ளுமாறும் உண்மையான வட்டியை மட்டுமே வசூல் செய்ய அறிவித்துள்ளது.

எனவே வங்கிகள் உங்களிடம் Floating Intrest rates மூலம் பணத்தை வசூல் செய்தால் உடனடியாக வங்கியை அணுகவும்.

 

உறுதி செய்துகொள்ளவும்...
 

உறுதி செய்துகொள்ளவும்...

வட்டி விகித முறையை மாற்றியதன் மூலம் அபராதத் தொகையை நீக்கியது மட்டும் அல்லாமல் கடன் பெற்றவர்கள் பணத்தைச் சேமிக்கவும் வழி செய்துள்ளது. மேலும் கடன் வாங்கும் போதே வட்டி விகித முறையை உறுதி செய்துகொள்வது உத்தமம்.

சம்பள கணக்கு...

சம்பள கணக்கு...

உங்கள் கடன் தவணையை உங்கள் சம்பள வங்கிக் கணக்கில் இணைப்பதன் மூலம் அதைச் செலுத்துவதைக் குறித்துக் கவலை கொள்ளத் தேவையில்லை. வங்கிகள் குறிப்பிட்ட தேதியில் தேவையான அளவு பணத்தை உங்கள் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளும்.

ப்ரிபே முறை...

ப்ரிபே முறை...

தற்போது வங்கிகளில் வீட்டுக்கடன்களில் ப்ரிபே (Prepaying) எனப்படும் முன்கூடியே செலுத்தும் வசதியையும் அளிக்கின்றன. இதன் படி ஒருவர் தான் பெற்ற கடனை முன்கூடியே கூடச் செலுத்தலாம்.

இதன் மூலம் கடனை செலுத்தும் தவணைக்காலம் மற்றும் வட்டியும் குறையும்.

 

 

வரவுத் தொகை

வரவுத் தொகை

இந்த முன்கூடியே செலுத்தும் வசதி மூலம் வரவுத் தொகை ஏதாவது மீதம் இருந்தால் அதனைத் திரும்பப் பெறவும் (Withdrawal) செய்யலாம். ஆனால் குறைந்த வட்டி போன்ற வசதிகளை இது குறைக்கும்.

இந்த வசதி அடிப்படைப் வட்டி விகிதத்தில் 25-50 புள்ளிகள் அதிகம் செலுத்துவதன் மூலம் கிடைக்கும். இந்த அடிப்படை சாதாரண வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை விடச் சற்று அதிகம்.

 

வங்கிகள்

வங்கிகள்

இத்தகையை வசதிகள் இந்தியாவில் ஹெச்எஸ்பிசி வங்கியின் ஸ்மார்ட் ஹோம், எஸ் பி ஐ வங்கியின் மேக்ஸ் கெயின் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கியின் ஹோம் சேவர் மற்றும் ஹோம் கிரெடிட் ஆகிய திட்டங்களின் மூலம் கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to Repay and Save On Home Loans?

Home is one of the basic necessities of life and to have a home of our own choice is one of the most common dreams in everyone’s life. At times, when we are not financially strong enough, home loans fulfills our dream to have a home of our own choice.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X