பிஎப் சந்தாதார்களுக்கு 6 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் பணி புரியும் நிறுவனத்தில் உங்களது சம்பளத்தின் ஒரு பங்காக ஒவ்வொரு மாதமும் பிஎப் பிடித்தம் செய்கிறார்களா? இந்த பணத்திற்கு வரி இல்லை ஆனால் வட்டி உண்டு என்று எல்லோருக்கும் தெரியும், ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா..?

 

ஆம், உங்கள் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஆயுள் காப்பீடும் உள்ளது.

பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு

பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு

இது பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) என்று அழைக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி கணக்குப் உரிமையாளர் இறக்கும் பொது பிஎப் சந்தாதாரின் வாரிசுகள் இதைப் பெறலாம்.

யாருக்கெல்லாம் இது பொருந்தும்?

யாருக்கெல்லாம் இது பொருந்தும்?

இந்தத் திட்டம் யாரெல்லாம் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் சம்பளத்தில் இருந்து பிஎப் திட்டத்தில் பங்களிக்கிறீர்களோ அவர்கள் எல்லாம் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் ஊழியர் சேமலாப நிதியம் (EPFO)மூலம் கட்டமைக்கப்பட்டது.

 

கவனத்தில் கொள்ள வேண்டியவை
 

கவனத்தில் கொள்ள வேண்டியவை

சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு அளிக்கின்றது என்றால் அது EPFO இல்லாமல் தனியாக அளிக்கிறார்களா என்பதை உறுதி செய்வது நல்லது.

இந்தக் காப்பீடு திட்டத்திற்கு ஊழியர்கள் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவைல் இல்லை.

 

காப்பீடு தொகை

காப்பீடு தொகை

இந்தக் காப்பீட்டிற்கான தொகை செப்டம்பர் 2015 ஆம் முதல் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பின் படி சந்தாதார்களின் பரிந்துறைப்பாளர்கள் 6 லட்சம் வரை பெறலாம்.

 

எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

இந்த காப்பீடு 12 மாத சம்பளம் பெறுவதைப் பொருத்து கணக்கிடப்படுகிறது. அதிகபட்சம் 15,000 ரூபாய் வரை இந்தச் சம்பளம் வாங்குபவர்கள் இதில் பயன்பெறலாம். இங்குச் சம்பளம் என்றால் அடிப்படை ஊதியம் மற்றும் கிராக்கிப்படி இரண்டும் ஆகும்.

எவ்வளவு தொகை பெற இயலும்

எவ்வளவு தொகை பெற இயலும்

குறைந்தபட்சம் 1.5 லட்சம் ரூபாயில் இருந்து அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை இதன் மூலம் பெற இயலும். இது சராசரியாக தங்களது சராசரி சம்பளத்தில் இருந்து 30 முறைகளுக்கான பணமாக கணக்கிடப்பட்டு அளிக்கப்படும்.

இது ஊழியர்களின் வயது மற்றும் வேலை செய்த நாட்களைப் பொருத்து மாறும்.

 

உரிமைகோரல் செயல்முறை

உரிமைகோரல் செயல்முறை

ஒரு வேலை ஊழியர் காலமானால் இறப்பு சான்றிதழ், குடும்ப சான்றிதழ், மற்றும் வங்கி விவரங்கள் போன்றவற்றை அளித்து பரிந்துறைப்பாளர்கள் உரிமைகோரலாம்.

வருங்கால வைப்பு நிதி கணக்கில் பரிந்துறைப்பாளர்கள் யாரும் இல்லை என்றால் சட்ட பூர்வமான வாரிசுகள் இதைப் பெற இயலும்.

இந்த உரிமைகோரல் ஊழியர் இறந்தால் மட்டுமே தவிர வேறு எந்த காரணத்தைக் கொண்டும் பெற இயலாது.

 

பிஎஃப் இருப்பை சரிபார்க்க எளிமையான 5 வழிகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Did you know Subscribers of provident fund get life insurance cover

Did you know Subscribers of PF can get life insurance cover of up to Rs6 lakh
Story first published: Tuesday, September 27, 2016, 15:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X