பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பொருட்கள் கொள்முதல் பணியில் இறங்கி உள்ளதாகவும் பாராளுமன்றத்தில் மாநிலங்களின் நிதி அமைச்சரான அர்ஜூன் ராம் தெரிவித்துள்ளார்.
சோதனை நடைபெற்ற நகரங்கள்
முதற்கட்டமாக 10 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் வெளியிட்டனர்.
நாம் இப்போது இதில் உள்ள சாதகங்கள் மற்றும் பதக்கங்களை பார்ப்போம்.
நன்மை
1. கள்ள நோட்டு அடிக்க முடியாது.
2. பாதுகாப்பு அம்சங்களை எளிதாகச் சரி பார்க்கலாம்.
3. எளிதாகச் சேதம் ஆகாது.
4. சுத்தமாக இருக்கும். அழுக்கு சேராது.
5. நீரில் இருந்தாலும் ஏதுவும் ஆகாது.
6. நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும் என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவு.
தீமை
1. உற்பத்தி செலவு அதிகம்
2. மடிக்க முடியாது
3. எளிதாக மடித்து சட்டை பைகளில் வைக்க இயலாது
4. எண்ணுவது கடினமாக இருக்கும்
5. ஏடிஎம் இயந்திரங்களை மீண்டும் மாற்றி அமைக்க வேண்டி வரும்.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம்
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் சராசரி ஆயுட்காலம் 5 வருடம் என்றும் கள்ள நோட்டு அடிக்க இயலாது என்றும் கூறுகின்றனர். பேப்பரில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளை விட பிளாஸ்டிக்கில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் சுத்தமாகவும் இருக்கும்.
முதல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் முதன் முதலில் 1968ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டாலர்கள் அச்சடிக்கப்பட்டது. இது மிகவும் பாதுகாப்பானது. இத்தகைய பிளாஸ்டிக் நோட்டுகளைக் கள்ளத்தனமாக அச்சிட முடியாது.
பிற நாடுகள்
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் பிளாஸ்டிக் நாணயங்களைப் பயன்படுத்துகிறது. இதைத் தவிர உலகின் 30 நாடுகள் பிளாஸ்டிக் நாணயங்களைப் பயன்படுத்துகிறன.
மேலும் படிக்க: விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு..!
மேலும் படிக்க: விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு..!