எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டுகள் பயன்படுத்துவதில் சிறப்பான சேவையை வழங்க ஏடிஎம் அட்டை ஆன்/ஆஃப் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
பதிய வசதியால் என்ன பயன்?
இந்த புதிய வசதியின் மூலம் டெபிட் கார்டுகளில் உள்ள சேவைகளில் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தாங்கலாகவே இயக்க அல்லது செயலிழக்க செய்யலாம். இந்த புதிய வசதியை எஸ்பிஐ குவிக் சேவையின் மூலம் கிடைக்கும்.
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டுக்கு ஒரு வாடிக்கையாளர் தங்களது ஏடிஎம் கார்டுகளை எஸ்பிஐ குவிக் செயலியின் மூலம் ஷாப்பிங் மால், பெட்ரோல் பங்குகள், கடைகள் போன்றவற்றில் பணம் செலுத்தும் சேவையை தங்களது அட்டையில் இருந்து செயல் நீக்கலாம் வேண்டும் என்றால் மீண்டும் இயக்கவும் செய்யலாம்.
டெபிட் கார்டுகளின் பயன்பாட்டைப் பொருத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயன்பாடுகளையும் தேர்வு செய்யலாம்.
எப்படிப் பயன்படுத்துவது
எஸ்பிஐ குவிக் செயலியை பயன்படுத்த உங்கள் மொபைலில் முதலில் பதிவிறக்கம் செய்து பதிவு செய்ய வேண்டும்.
எந்தெந்த மொபைல் போன்களில் பயன்படுத்த இயலும்?
இந்த எஸ்பிஐ குவிக் செயலி ஆண்ட்ராய்டு, விண்டோஸ், ஐ ஓஎஸ், பிளாக்பெர்ரி போன்ற இயங்கு தளங்களில் இயங்கும்.
எவ்வளவு பயனர்கள் பயன்படுத்துகின்றனர்?
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவைப் பொருத்த வரை 70 லட்சம் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ குவிக் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதில் 19 லட்சம் பயனர்கள் செயலி மூலமாகவும், பிறர் எஸ்எம்எஸ் சேவை மூலமாகவும், மிஸ்டு கால் சேவை மூலமாகவும் பயன்படுத்திவருகின்றனர்.