ஒரு வீட்டின் உரிமையாளராக இருப்பது எதனுடனும் ஒப்பிட முடியாத சந்தோஷம். அந்த அபரிமிதமான சந்தோஷத்தில் நம்மில் பெரும்பாலானோர், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வீட்டு கடனை பெறுவதற்கான செயல்முறையை முடித்து வீடு கட்டி முடித்துவிட வேண்டும் என்கிற ஆர்வமிகுதியில் வீட்டுக்கடன் விண்ணப்பத்தில் நுண்ணிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ள பல்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பொறுமையாகப் படிக்காமலே கையெழுத்திட்டு விடுகிறோம்.
இருப்பினும் வீட்டின் உரிமையாளராகும் மகிழ்ச்சியுடன் ஒரு கடனாளியாக பொறுப்புகளையும் உடன் கொண்டு வருகிறது. ஒரு பொறுப்பான கடனாளியாக நீங்கள் உங்கள் வீட்டிற்கான கடனை செலுத்திக் கொண்டிருக்கும் செயல்முறையில் உள்ள காலம் வரை, நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
கடன் கட்டுவதிலிருந்து ஒருபோதும் தவறாதீர்கள்
கடனைத் திருப்பி செலுத்துவதில் ஏதேனும் தவறுதல் நிகழ்ந்தால் நீங்கள் நீண்ட காலத்திற்கு சிக்கல்களில் மாட்டிக் கொள்வீர்கள். ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இஎம்ஐ யை (சமன்படுத்தப்பட்ட மாதாந்திர தவணை) கழித்துக் கொள்ள போதுமான தொகை உங்கள் வங்கிக் கணக்கில் இல்லாத ஒரு நிலைமை ஏற்பட்டால், பிறகு அபராதத்தை செலுத்துவதால் விஷயங்கள் சரியாகி விடாது. இது போல பலமுறை நிகழ்ந்தால் உங்கள் நற்மதிப்பு மதிப்பெண்கள் பாதிக்கப்படும்.
தேவைக்கு அதிகமாக கடன் வாங்காதீர்கள்
ஒரு கடனாளியாக நீங்கள் பல்வேறு பயன்களை அடைவீர்கள். மாதாந்திர வாடகையைப் பற்றி கவலையில்லை; அத்துடன் வரித் தள்ளுபடியும் கிடைக்கும். உண்மையில், தேவைப்பட்டால் நீங்கள் மற்றொரு கடனைக் கூட பெற முடியும்; நீங்கள் அதற்கு தகுதியானவர். இருந்தாலும், பல்வேறு கடன்களை வாங்கி பொருளாதார ரீதியாக உங்கள் மீது சுமையேற்றிக் கொள்வது விவேகமான யோசனை அல்ல என்ற உண்மையை நீங்கள் கவனிக்கத் தவறக் கூடாது.
நீங்கள் ஒரு வீட்டுக் கடனைக் கட்டிக் கொண்டிருக்கும் போதே மற்றொரு கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம். உதாரணமாக சொல்லப் போனால், வீட்டுக்ககடன் நிலுவையில் இருக்கும் போதே ஆட்டோ மொபைல் கடன் போன்றவற்றை வாங்க வேண்டாம். நீங்கள் பல்வேறு ஆதாரங்களிலிருந்து கடன் வாங்குவீர்களானால், ஒருவேளை ஏதேனும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் ஏதேனும் நேர்ந்தால், நீங்கள் ஒன்றுக்கு இரண்டு கடன்களைக் கட்ட தவறியவராவீர்கள்.
மெத்தனமாக இருந்து விடாதீர்கள்.
நீங்கள் உங்கள் வேலையில் முன்னேற்றம் அடையும் போது உங்கள் சம்பளம் அதிகரிக்கிறது. சில காலங்களுக்கு முன்பு மிகப் பெரிய சுமையாகத் தோன்றிய மாதாந்திர தவணைத் தொகை இனிமேல் ஆலுப்பூட்டுவதாக இருக்காது.
இதனாலேயே வீட்டுக்கடன் சுமை பற்றி நீங்கள் மிகவும் வசதியாக உணர்வீர்கள். ஆனால் உங்களுக்கு மாதாந்திர சம்பளம் உயர்ந்திருந்தால் நீங்கள் அதிகமாக சேமிக்கலாம் மற்றும் உங்கள் கடனை முன்கூட்டி செலுத்தி விட முடியும்.
உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்
உலகம் முழுவதிலும் நடக்கும் நிகழ்வுகள் நம் அனைவரின் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதில் வீடு வாங்குபவர்களும் அடங்குவர். உதாரணமாக வங்கிகள் அவர்களின் வட்டி விகிதங்களை மாற்றிக் கொண்டே இருக்கின்றன.
நீங்கள் உங்கள் கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கி வட்டி விகிதங்களை குறைத்துள்ளது என்பதற்காக அந்த மற்றொரு வங்கிக்கு மாற்றினால், அது உங்கள் மாதாந்திர தவணைத் தொகையை கணிசமாகக் குறைக்கலாம்.