திங்கட்கிழமையைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் மும்பை பங்குச்சந்தையில் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது. இதன் காரணமாக நிஃப்டி குறியீடு வரலாறு காணாத வகையில் முதல் முறையாக 9,300 புள்ளிகளை எட்டியுள்ளது.
நேற்றை வர்த்தகத்தில் எதிரொலியாக இன்று உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்திருந்தாலும், பன்னாட்டு முதலீட்டாளர்களின் இன்றைய அதிகப்படியான முதலீட்டுக்கு முக்கியக் காரணம் உண்டு.
என்ன காரணம்
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் அந்நாட்டுப் பொருளாதாரத்திற்கு ஏற்ற முடிவுகள் தான் வரும் என்று எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் ஐரோப்பிய சந்தை முழுவதும் இதன் அலைகள் பரவி வருகிறது. இதன் காரணமாக இன்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் சந்தைகளை 0.2 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்தது.
பன்னாட்டு முதலீடுகள்
ஐரோப்பிய சந்தையின் சாதகமான சூழ்நிலை ஆசிய சந்தையில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய ஆர்வத்தைத் தூண்டியது. இதன் காரணமாக அதிகப்படியான லாபத்தை ஈர்க்கும் திட்டத்துடன் பன்னாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்தனர்.
சென்செக்ஸ்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கம் முதல் நிலையான வர்த்தகத்தைப் பெற்று வந்த சென்செக்ஸ் குறியீடு ஐரோப்பிய சந்தை சில சரிவுகளைச் சந்தித்தாலும் மீண்டும் உயர்வடையத் துவங்கியது.
இதன் காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் 287.40 புள்ளிகள் உயர்வடைந்து 29,943.24 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
பன்னாட்டு முதலீடுகள் பெரும்பாலும் ப்ளூ சிப் பங்குகள் மீது முதலீடு செய்யப்படும் காரணத்தினால் இன்று நிஃப்டி குறியீடு சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் 88.65 புள்ளிகள் உயர்ந்து நிஃப்டி குறியீடு வரலாறு காணாத வகையில் 9,306.60 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தக முடிவில் டிசிஎஸ், சிப்லா, கெயில், என்டிபிசி, எச்டிஎப்சி வங்கி ஆகியவை சரிவைடந்தது.
அதேபோல் மஹிந்திரா, ஆக்சிலஸ் வங்கி, பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோ கார்ப் ஆகியவை அதிகளவிலான உயர்வை அடைந்தது.