இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது டெலிகாம் சேவைப் பிரிவு 7 மாதங்களுக்குப் பின் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து சம்பாதிக்கத் துவங்கியுள்ளது. இதனால் வருகிற மார்ச் மாதத்துடன் ஜியோ அறிவித்த அனைத்து இலவசங்களும் முடிவிற்கு வருகிறது.
இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சுமார் 8 வருட உயர்வை அடைந்துள்ளது. இதுவே இன்றைய வர்த்தக உயர்விற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இதனுடன் ஆசிய சந்தைகளும் இன்று 0.6 சதவீதம் வரை உயர்ந்துள்ள காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகமும், முதலீடும் தொடர்ந்து உயர்வான நிலையிலேயே இருந்தது.
இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 103.12 புள்ளிகள் உயர்ந்து 28,864.71 ரூபாய் உயர்ந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 19.05 புள்ளிகள் உயர்ந்து 8,926.90 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.