வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, நாட்டின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது 40வது வருடாந்திர கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் பலவேறு அறிவிப்புகள் சந்தையையும், சந்தை முதலீட்டாளர்களையும் மகிழ்வித்தது.
விப்ரோ
இதேபோல் நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான விப்ரோ 1.71 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை பைபேக் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதன் அறிவிப்புகள் இன்று சரிந்து கிடைந்த சந்தையை மீண்டும் லாபகரமான நிலைக்கு தள்ளியது.
இரு துறைகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸால் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையும், விப்ரோ நிறுவனத்தால் ஐடி துறையும் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது அதிகளவிலான வர்த்தகத்தை பெற்ற சென்செக்ஸ் மதிய நேரத்தில் சரிவை சந்தித்தது. ஐரோப்பிய சந்தையின் துவக்கத்திற்கு பின் மீண்டும் உயர துவங்கியது.
சென்செக்ஸ்
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 124.49 புள்ளிகள் உயர்ந்து 32,028.89 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போல் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிஃப்டி குறியீடு இன்று வர்த்தக முடிவில் 41.95 புள்ளிகள் உயர்ந்து 9,915.25 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் எஸ் அண்ட் பி சென்செக்ஸ் குறியீட்டின் கீழ் இருக்கும் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று விப்ரோ, ரிலையன்ஸ், கோல் இந்தியா, டிசிஎெஸ், கோட்டாக் வங்கி, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் 1.12 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டது.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
பார்தி ஏர்டெல், லுபின், பவர் கிரின்ட், ஹீரோ மோட்டோ கார்ப், சிப்லா, சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.