மும்பை பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கையில் வட்டி குறைப்பு இருக்கும் என எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தனர்.
ஆனால் இன்று நடந்து முடிந்த நாணய கொள்கைகூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கி ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ ரேட் என எதையும் குறைக்கவில்லை. மேலும் சில நாட்களுக்கு முன்பு சிஆர்ஆர் விகிதத்தில் செய்த மாற்றங்களையும் டிசம்பர் 10ஆம் தேதியில் இருந்து திருப்ப பெற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான நேரம் மதியம் 2.28 மணி, 2.29 மணிக்குச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு மளமளவெனச் சரிந்தது.
இந்நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு நிலையான வர்த்தகத்தைப் பெற்ற தொடர்ந்து உயர்வான நிலையில் இருந்து. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியான அடுத்தச் சில நிமிடங்களில் சென்செக்ஸ் குறியீடு 100 புள்ளிகள் வரை சரிவை கண்டது.
இந்நிலையில் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 155.89 புள்ளிகள் சரிந்து 26,236.87 புள்ளிகளை அடைந்தது.
மேலும் நிஃப்டி குறியீடு 41.10 புள்ளிகள் சரிந்து 8,102.05 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.