சரக்கு மற்றும் சேவையை முழுமையாக அமலாக்கம் செய்ய மாநில அரசுகள் முழுமையாக ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஜூலை 1ஆம் தேதி உறுதியாக ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்படும் என உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் இன்று பங்குச்சந்தை வர்த்தகம் சிறப்பான வர்த்தகத்தை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்தது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி.
தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வந்த சென்செக்ஸ் இன்று வெறும் புள்ளிகளை மட்டுமே அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 36.20 புள்ளிகள் உயர்ந்து 31,309.49 புள்ளிகளை அடைந்துள்ளது. சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 21.60 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 9,675.10 புள்ளிகளை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ், எல் அண்ட் டி, ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ் ஆகியவை 1 முதல் 1.92 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டது. கோல் இந்தியா, கெயில், இன்போசிஸ், லூபின், டாக்டர் ரெட்டி ஆகியவை அதிகளவிலான சரிவை அடைந்தது.