சர்வதேச சந்தையின் வர்த்தகச் சூழ்நிலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, கார்பரேட் நிறுவனங்களின் சிறப்பான காலாண்டு முடிவுகள் ஆகியவற்றின் சாதகமான சூழ்நிலையின் காரணமாக இன்று வர்த்தகத் துவக்கமே அமர்க்களமாக்க இருந்தது.
புதன்கிழமை வர்த்தகத் துவக்கத்திலேயே உயர்வு துவங்கிய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது.
சென்செக்ஸ்
2015 மார்ச் மாதம் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 30,024 புள்ளிகள் என்ற இமாலய உச்சத்தை அடைந்த நிலையில், இன்று உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகள் இந்திய சந்தைக்குச் சாதமாக இருக்கும் நிலையில் சென்செக்ஸ் குறியீடு 30,146.54 புள்ளிகள் என்ற மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது.
164 புள்ளிகள் உயர்வு
1.45 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 168.76 புள்ளிகள் உயர்ந்து 30,112.00 புள்ளிகளை எட்டியது.
மேலும் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்திற்குப் பின் சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்றும் தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வரும் நிலையில் 46.60 புள்ளிகள் உயர்ந்து 9,353.20 புள்ளிகளை எட்டியுள்ளது.
12 சதவீதம் உயர்ந்து
சென்செக்ஸ் குறியீடு 2017ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 12 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. உலகச் சந்தைகளை ஒப்பிடுகையில் இந்தியா சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும் இந்திய சந்தையில் முதலீடு செய்வோருக்கு சுமார் 19 சதவீதம் லாபம் கிடைப்பதாக டாலெக்ஸ் 30 குறியீடு தெரிவித்துள்ளது.