மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 32,000 புள்ளிகள் என்ற வரலாறு காணாத உச்சத்தில் இருந்து இன்று 363 புள்ளிகள் இழப்புடன் 31,710.99 புள்ளிகளை அடைந்ததுள்ளது.
இன்றைய சரிவிற்கு சிக்ரெட் மீது விதிக்கப்பட்ட கூடுதல் செஸ், இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி-யை பெரிய அளவில் பாதித்தது ஒட்டுமொத்த எப்எம்ஜிசி துறையை அதிர வைத்தது.
முக்கிய காரணம்
இன்றைய சரிவிற்கு ஐடிசி நிறுவனத்தின் சரிவு மட்டும் காரணமில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தயாரித்துள்ள சுகாதார மசோதா அமலாக்கம் செய்யவதில் ஏற்பட்ட பரிச்சனை மற்றும் இதனால் ஏற்பட்ட வர்த்தக பாதிப்புகள் அமெரிக்க சந்தையை அதிகளவில் பாதித்தது.
பங்கு விற்பனை
இதன் எதிரொலியாக ஆசிய சந்தையும் பாதிப்படைந்தது. ஆசிய சந்தையில் ஏற்பட்ட பாதிப்பின் அதிரவலைகள் இந்திய சந்தையில் முதலீட்டாளர்களை லாப நோக்கில் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்ய தூண்டியது.
இதனாலேயே இன்றும் 400 புள்ளிகள் சென்செக்ஸ் குறியீட்டில் குறைந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 363.79 புள்ளிகள் சரிந்து 31,710.99 புள்ளிகளை அடைந்தது, சென்செக்ஸ் குறியீட்டை போல தொடர் வர்த்தக சரிவில் இருக்கும் நிஃப்டி குறியீடு 88.80 புள்ளிகள் சரிந்து 9,827.15 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
செவ்வாய் கிழமை வர்த்தக முடிவில் லாபம் மற்றும் நஷ்டம் அடைந்த நிறுவனங்களின் முழு பட்டியல்.