மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் முதல் முறையாக 32,091.02 புள்ளிகளைத் தொட்டுச் சாதனைப் படைத்துள்ளது. அதே நேரம் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டியும் 9,894.75 புள்ளிகளை முதன் முறையாகத் தொட்டுள்ளது.
அமெரிக்கச் சந்தை உயர்வு, ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் 0.25 சதவீதம் வட்டி விகிதம் குறைக்க வாய்ப்பு மற்றும் ஜூன் காலாண்டு பிளாட்டாக முடிந்தது ஆகிய காரணங்களால் தலால் ஸ்டீரிட்டில் மூர்க்கத்தனமாக இன்று வர்த்தகம் நடைபெற்றுள்ளது. நாணய கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 1-2 தேதிகளில் நடக்க வாய்ப்புள்ளது.
காலை நேர நிலவரம்
இன்றைய பங்குச்சந்தை முடியும் நேரத்தில் சென்செக்ஸ் 232.56 புள்ளிகள் அதாவது 0.73 சதவீதம் உயர்ந்து 32,037.38 புள்ளிகளுடனும், நிப்டி 75.60 புள்ளிகள் அதாவது 0.63 சதவீதம் உயர்ந்து 9,891.70 புள்ளிகளாக வர்த்தகம் முடிந்தது.
உயர்வை அளித்த துறைகள்
மும்பை பங்கு சந்தையினைப் பொருத்த வரையில் நுகர்வோர் பொருட்கள் துறை சார்ந்த பங்குகள் 1.61 சதவீதமும், கேப்பிட்டல் கூட்ஸ் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் 1.14 சதவீதமும், வங்கித் துறை பங்குகள் 0.89 சதவீதமும், மெட்டல் துறை பங்குகள் 0.75 சதவீதமும் உயர்வைச் சந்தித்தன.
நட்டத்தைச் சந்தித்த துறைகள்
எண்ணெய் மற்றும் எரிவாய் நிறுவனப் பங்குகள் 0.25 சதவீதம் வரை சரிந்து இன்று வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
டாப் 5 லாபம் அளித்த பங்குகள்
ஐடிசி (+3.12), ஐசிஐசிஐ வங்கி (+ 1.61%), பார்தி ஏர்டெல் (+ 1.28%), மாருதி (+ 1.24%) மற்றும் எல் அண்ட் டி (+ 1.23%)
டாப் 5 நட்டம் அளித்த பங்குகள்
ஓஎன்ஜிசி (-2.43%), ஏஷியன் பெயின்ட்ஸ் (-0.53%), எம்.எம் (-0.43%), டாடா மோட்டார்ஸ் (-0.37%) மற்றும் எம் & எம் (-0.31%)