கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு, இடைசெருகல், வில்லிசேரி், ஊத்துபட்டி, கழுகுமலை, சந்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய் பயிரிடப்பட்டுள்ளது. இந்தாண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால் கத்தரிக்காய், வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்டுக்கு கத்தரிக்காய், வெண்டைக்காய் வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.20க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.8க்கும், ரூ.25 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ வெண்டைக்காய் தற்போது ரூ.10க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் காய்கறி பறிப்பு கூலி, வாகன செலவு ஆகியவற்றை பார்த்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.