Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
For Daily Alerts
மும்பை: இந்தியாவில் படித்துவிட்டு எப்போ அமெரிக்காவிற்கு பறக்கலாம் என்று யோசித்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் படித்த இந்திய மாணவர்கள் பலரும் தாய்நாட்டிற்கு திரும்பி வந்து தொழில் முனைவோர்களாக மாறிவருகின்றனராம்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு, வார்டன் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பிஸினஸ் பல்கலைக்கழகங்களில் எம்.பி.ஏ படித்த இந்திய மாணவர்கள் பலரும் இந்தியாவிற்கு வந்து தொழில் தொடங்கியுள்ளனர்.
2012 ம் ஆண்டு பேட்ச்சில் படித்த 80 மாணவர்களில் 20 பேர்வரை தொழில் தொடங்கியிருக்கின்றனராம். இந்த ஆண்டு 100 பேர்வரை எம்.பி.ஏ படித்து வருகின்றனர். அவர்களில் பலரும் ஏற்கனவே இந்தியாவில் தொழில் முனைவோர்களாக இருக்கின்றனராம். இந்த தகவலை எகனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary