இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் திட்டத்தின்படி, கொள்முதல் செய்யப்படும் சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1,350, சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1,300 வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளிடம் ஏமாற்றத்தையும், துயரத்தையுமே ஏற்படுத்தியுள்ளது.
நெல் கொள்முதல் விலையை வெறும் 16 சதவீதம் மட்டுமே தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் மத்திய அரசு அறிவித்த விலையுடன் சன்ன ரக நெல்லுக்கு 70 ரூபாயும், சாதாரண நெல்லுக்கு ரூ.50ம் ஊக்கத் தொகையாக சேர்த்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2000 ஆக உயர்த்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.