தமிழகத்தில் 6,805 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளிப் பண்டிகையையொட்டி அங்கு பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 30,000 ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனசும், 1.67 சதவீதம் கருணைத் தொகையும் சேர்த்து 10 சதவீதம் போனசாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மேற்பார்வையாளர்களுக்கு ரூ.4,200, விற்பனையாளர்களுக்கு ரூ.4,050 மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.3,900 போனசாக கிடைக்கும்.
இது குறித்து தமிழக அரசின் நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட சி' பிரிவு ஊழியர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட டி' பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனசும், 1.67 சதவீத கருணைத் தொகையும் சேர்த்து மொத்தம் 10 சதவீதம் போனசாக வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.