ரயில்வே பட்ஜெட் வருகிற 26ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில் ரயில்வே பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
புதிதாக 4200 ரயில் பெட்டிகள் தயாரிப்பது தொடர்பான அறிவிப்பு இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிததாக 670 ரயில்வே என்ஜின்கள் தயாரிப்பது தொடர்பான அறிவிப்பும் வெளியாகலாம். இதுதவிர புதிதாக 176,000 லோகன்கள் தயாரிப்பது தொடர்பான அறிவிப்பும் வெளியாகலாம்.
நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் பயன் தரும் வகையில் அறிவிப்புகள், திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மமதா பானர்ஜி கடந்த காலத்தில் மேற்கு வங்கத்தை மட்டுமே மையமாக வைத்து போட்ட ரயில்வே பட்ஜெட் கடும் அதிருப்திக்குள்ளாகியது என்பதால் இந்த முறை இந்தியாவுக்கான பட்ஜெட்டாக அது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டில் புதிதாக 100 ரயில்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 175 ரயி்ல்கள் அறிவிக்கப்பட்டன.
இதுதவிர மேலும் பல புதிய திட்டங்களுடன் ரயில்வே பட்ஜெட் தயாராகி வருவதாக தெரிகிறது.