டெல்லி: உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 800 மில்லியன் மக்கள் மானிய விலையில் அரசி, கோதுமை, பருப்பு உள்ளிட்டவற்றை பெறுவர்.
உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவால் இந்தியாவில் உள்ள 3ல் 2 பங்கு மக்களுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்டவை கிடைக்கும். கிராமப்புறங்களில் 75 சதவீத மக்களும், நகரப் புறங்களில் 50 சதவீதம் பேரும் இந்த மசோதாவால் பயன்பெறுவர்.
இந்த மசோதா இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்துள்ளார். மாதம் தோறும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும். ஒரு கிலோ அரிசி ரூ.3க்கும், ஒரு கிலோ கோதுமை ரூ.2க்கும் மற்றும் ஏனைய தானியங்கள் கிலோ ரூ.1க்கும் வினியோகம் செய்யப்படும்.
இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு 3 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விலை மாற்றம் செய்யப்படும். இந்த மசோதாவால் அரசுக்கு உணவு மானியமாக ரூ.20,000 கோடி கூடுதலாக செலவாகும்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
Cabinet clears Food Security Bill: 2/3rd of population to get foodgrain at Rs 1-3/kg | நாட்டின் 60% மக்களுக்கு 3 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. 2 ரூபாய்க்கு கோதுமை-உணவு பாதுகாப்பு மசோதா மாயம்!
The Cabinet on Tuesday approved changes to the landmark Food Security Bill to grant the nation's 67 percent population the right to get monthly quota of 5 kg foodgrains at highly subsidised rates of Rs 1-3 per kg.
Story first published: Wednesday, March 20, 2013, 16:18 [IST]