2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பிருப்பதாகக் கூறி அமெரிக்கா அவருக்கு விசா மறுத்து வருகிறது. அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றுவதற்கு அவருக்கு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் எம்.பி.யான ஆரோன் ஸ்ஹோக் தலைமையிலான அந்நாட்டு வர்த்தகக் குழு நேற்று முதல் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறது. இக்குழுவினர் நாளை மோடியை அகமதாபத்தில் சந்திக்க இருக்கின்றனர். இக்குழு பெங்களூர் மற்றும் டெல்லிக்கு செல்கிறது.
நரேந்திர மோடிக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான விரிசல் முடிவுக்கு வரும் காலம் நெருங்கிவிட்டது என்பது இக்குழுவின் அகமதாபாத் பயணம் சுட்டிக்காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.