பொதுவாக வங்கிகள் தங்களுக்கான நிதியை ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடனாகப் பெற்றுக் கொள்வது வழக்கம். நடைமுறையில் வங்கிகளின் முதலீடுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதம் 6.5%. ரிசர்வ் வங்கியிடம் இருந்து நீண்டகால அடிப்படையில் வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.5%. குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 7.5%.என இருந்து வருகிறது.
2012-13 ஆம் நிதி ஆண்டின் கடைசி நாள் என்பதால் மார்ச் 31- ந்தேதியன்று மட்டும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மற்ற நாட்களைப் போல் இல்லாமல் ஒரே நாளில் அதிக தொகையை வங்கிகள் கடன் வாங்கியிருக்கின்றன.மார்ச் 31-ந் தேதியன்று மட்டும் ரூ1.81 லட்சம் கோடியை கடனாக வங்கிகளுக்குக் கொடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இதில் குறுகிய கால கடன் என்ற அடிப்படையில் ரூ7 ஆயிரம் கோடியை வங்கிகள் பெற்றுள்ளன.