இந்த விலையேற்றத்திற்கு இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம் காரணமாகச் சொல்லப்படுகிறது. பணவீக்கத்தின் காரணமாக இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை கனிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. அதனால் மெக்டொனால்டின் லாபம் குறைந்திருக்கிறது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அரசு சேவை வரிசயை அதிகரித்திருக்கிறது. அதனால் மெக்டொனால்டு 5 சதவீத விலையேற்றத்தை செய்யவிருக்கிறது. வேறு வழியில்லாமல் இந்த விலையேற்றத்தைச் செய்யவிருப்பதாக மெக்டொனால்டு தெரிவித்திருக்கிறது.
தற்போது இந்திய பணவீக்கம் 8 முதல் 10 சதவீதம் அளவிற்கு இருக்கிறது. எனவேதான் தாங்கள் விலையை உயர்த்துவதாக மெக்டொனால்டின் மேற்கு மற்றும் தென் இந்தியாவின் துணை சேர்மன் அமித் ஜாட்டியா தெரிவித்திருக்கிறார்.
தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதால், நுகர்வோர் இரட்டை இலக்க எண்களில் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவர்களுடைய சம்பள உயர்வு மிகவும் குறைவாக இருக்கிறது.
மேலும் கடந்த 2012வது நிதியாண்டில் தங்களுடைய கடைகளில் செய்யப்பட்ட விற்பனை 22 சதவீதத்தைத் தாண்டவில்லை என்று மெக்டொனால்டு தெரிவித்திருக்கிறது.