ஜூன் 2012க்குப் பிறகு, டாலருக்கு எதிரான இந்த வீழ்ச்சி மிகப் பெரிய வீழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2 வாரங்களாகவே டாலருக்கு எதிரான மதிப்பு படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. தங்கத்தின் விலை குறைந்து வருவதினால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்வதும் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் அதிகமாக தங்கத்தை இறக்குமதி செய்யும் போது அதற்கான பணத்தை டாலரில் செலுத்த வேண்டும். போதுமான டாலர் கையிருப்பு இல்லை என்றால், அவற்றை இந்திய ரூபாயில் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் போது இந்தியாவின் ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைகிறது.
தற்போது டாலரின் தேவை அதிகமாக இருப்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி தொடரும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் உலக அளவில் டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது.