எனினும், பெரும்பாலான பிரதிவாதிகள் வருங்காலத்தைப் பற்றியும், நிலுவையில் உள்ள முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க துரிதப்படுத்தியுள்ள காபினெட் குழுவின் தற்போதைய முயற்சிகளினால் முதலீட்டு செயல்பாடுகளில் ஏற்படக்கூடிய முன்னேற்றத்தைப் பற்றியும் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் எஃப்ஐசிசிஐ-யின் ஆய்வு தெரிவித்துள்ளது.
டபிள்யூபிஐ பணவீக்கத்தின் படுவீழ்ச்சி, ஆர்பிஐயின் கடன் விகிதங்களைக் குறைக்கவும், பொருளாதாரத்தில் முதலீடுகளை மேம்படுத்தவும் வழி வகுக்கிறது; ஆதலால் இந்த வீழ்ச்சி வருங்காலத்துக்கு உகந்ததே என்றும் இந்த தகவலறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பங்குபெற்ற பிரதிவாதிகள், செயல்பாட்டு மூலதனம் மற்றும் தவணைக் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் கடந்த ஆறு மாதங்களாக நிலவும் இறுதிநிலை வீழ்ச்சியை சுட்டிக்காட்டி, பணக்கொள்கை பரிவர்த்தனை மந்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வில் பங்குபெற்ற சுமார் 36% நிறுவனங்கள் தற்போதைய பொருளாதார சூழ்நிலை, கடந்த ஆறு மாதங்களில் மிதமானது முதல் கணிசமானது வரை முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். ஆனால் 49% பங்கேற்பாளர்கள் நிதியாண்டு 2013 -இன் முதல் இரண்டு காலாண்டுகளோடு ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த பொருளாதார சூழ்நிலையிலும் மேம்பாட்டை எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர்.