Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
For Daily Alerts
பண சந்தையில் சுமார் 2,420 கோடி ரூபாய் பெறுமானமுள்ள வெளிநாட்டு நிதிகளை, இந்தியப் பங்கு சந்தையில் மூன்றே நாட்களில் லாபகரமாக விற்பனை செய்துள்ளன. இன்னொரு புறம், உள்ளூர் நிறுவனங்கள், வெள்ளிக்கிழமை விற்பனைகளில், உள்ளூர் ஸ்தாபனங்களின் மொத்தம் 910 ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இந்த வாரம் டாலருக்கு சுமார் 58.96 ரூபாயாகச் சரிந்த ரூபாய் மதிப்பின் கூர்மையான வீழ்ச்சியினால் வெளிநாட்டு நிதிகள் கவலையடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நாணயத்தின் தொடர்ச்சியான பலவீனம், வெளிநாட்டு நிதிகளை அடுத்த வாரத்தில் மேலும் பல விற்பனைகளைச் செயல்படுத்த நிர்பந்திக்கக்கூடும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
யு.எஸ் மற்றும் இந்திய கடன் சந்தைகளுக்கு இடையிலான ரிட்டர்ன்கள் குறைந்து வருவதால் வெளிநாட்டு நிதிகள் கொஞ்சம் கொஞ்சமாக கடன் சந்தையிலிருந்தும் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. ஜூன் மாதத்தில் இதுவரை சுமார் 18,578.6 கோடி ரூபாய் பெறுமானமுள்ள கடன் திட்டங்களை விற்பனை செய்துள்ளன.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary