Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
For Daily Alerts
மின்சாரத்துறைக்கான மேல்முறையீட்டுத் நீதிமன்றத்தை (ஏபிடிஇஎல்) -ஐச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான ராகேஷ் நாத் அவர்கள், ‘பணவீக்கத்தைக் காட்டிலும் வேகமாக உயர்ந்து வரும் மின்கட்டணங்களை' கட்டுப்படுத்த வேண்டுமெனில், நாட்டின் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.
மேலும், தாமோதர் பள்ளத்தாக்குக் கழகத்தின் சேர்மனாகிய ஆர்.என்.சென் அவர்களும், நிலக்கரியின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகளால் மின்சாரத் துறையின் நிலையும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்று கூறியுள்ளார். நிலக்கரி விலைகளைக் குறைக்காமல் இச்சூழலை மாற்றுவதென்பது இயலாத காரியம்.
மேலும் சென் அவர்கள் கூறுகையில், நம் நாட்டில் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலக்கரி விலையைக் குறைக்கும் நோக்கில், அரசாங்கம் நிலக்கரிப் பாளங்களை பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அளிப்பதைப் பற்றி பரிசீலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary