சென்னை: நம் பொருளாதார வாழ்க்கையில் வங்கிகள் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன. மேலும் ஒரு நாட்டின் வளமான பொருளாதாரம், வங்கிகளின் செயல்பாட்டை பொறுத்தே அமையும். இதனால் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் தூண்களாக விளங்குகின்றன.
இந்தியாவில் ஏராளமான வங்கிகள் உள்ளன. ஒவ்வொரு வங்கியும் தனிப்பட்ட விதிகளையும் மற்றும் கட்டுப்பாடுகளையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் வங்கிகள் இடையே பணம் சம்பாதிப்பதிலும் சரி, மக்களுக்கு சேவை செய்வதிலும் சரி கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த தருணத்தில் இந்தியாரேக்கர் என்னும் இணையதளம் கடந்த திங்களன்று இந்தியாவின் தலைசிறந்த டாப் 10 வங்கிகளை பட்டியலிட்டு உள்ளது. அவற்றைப் பார்ப்போம்.
எஸ்பிஐ
இந்தியாவில் 13,000 கிளைகளையும், 5 துணை வங்கிகளையும் கொண்டு சிறந்து விளங்குகிறது எஸ்.பி.ஐ.
எச்.டி.எஃப்.சி.
எச்.டி.எஃப்.சி. வங்கிக்கு இந்தியாவில் 3,062 கிளைகளும், 10,099 ஏடிஎம்களும் உள்ளன.
பேங்க் ஆப் பரோடா
பேங்க் ஆப் பரோடா 4,288 கிளைகளுடன் 24 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
ஐசிஐசிஐ
ஐசிஐசிஐ வங்கி 3, 350 கிளைகளுடன், 10,486 ஏடிஎம்களுடன் 19 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி 5,937 கிளைகளுடனும் 72 மில்லியன் வாடிக்கையாளர்களுடனும் சிறப்பாக செயல்படுகிறது.
ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி 1,787 கிளைகள் மற்றும் 10,363 ஏடிஎம்களுடன் 7 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
சிட்டி வங்கி
சிட்டி வங்கி இந்தியாவில் 30 நகரங்களில் 42 கிளைகளை கொண்டுள்ளது. மேலும் இந்த வங்கி மென்பொருள் நிறுவனங்களுக்கு ஒரு முதுகெலும்பாக விளங்குகிறது.
ஐடிபிஐ வங்கி
1,111 கிளைகளும், 1,812 ஏடிஎம்களுடன் செயல்பட்டு வரும் ஐடிபிஐ வங்கி இந்திய அரசின் நேரடிப் பார்வையில் உள்ளது.
பேங்க் ஆப் இந்தியா
இந்தியாவில் 4,293 கிளைகளுடன் மொத்தம் 5 கண்டங்களில் தனது சேவையை வழங்கி வருகிறது பேங்க் ஆப் இந்தியா.
எஸ் வங்கி
425 கிளைகளும், 950க்கும் மேற்பட்ட ஏடிஎம்களுடன் செயல்பட்டு வருகிறது எஸ் வங்கி.