ஆர்.பி.ஐ, ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸை அறிவுறுத்தியது, "இந்நிறுவனத்தின் வெளிநாட்டு பங்குதாரர்களான எஃப்ஐஐயின் பங்குகள் விரிவாக்கப்பட்ட அன்னிய முதலீடு கொள்கையின் முலம் திருத்தப்பட்ட வரம்புக்கும் குறைவானது. இதனால் என்பிஎஃப்சியின் தீர்மானமாக எஃப்ஐஐயின் பங்களிப்பை 74 சதவிதம் வரை உயர்த்தப்பட்டது."
" சேவை முதலீட்டு திட்டத்தின் (PIS) கீழ், முதன்மை சந்தை மற்றும் பங்கு சந்தைகளில் மூலம் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட், பங்குகள் மற்றும் மாற்றத்தக்க கடன் பத்திரங்களை வாங்குவதற்கான வரம்பை 74 சதவீதம் வரை அதிகரிக்க அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் நிலை குழுமட்டத்திலும் மற்றும் பங்குதாரர்களும் ஒப்புக்கொண்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டன", என்று இந்திய ரிசர்வ் வங்கி, தெரிவித்தது.
"எனவே, இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு மீது கட்டுப்பாடுகளை உடனடியாக திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது," என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.