பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான, கே ஆர் காமத் இதை பற்றி கூறுகையில் "அந்நிய செலாவணி சந்தையின் நிலையற்ற தன்மையாலும் ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளின் முலம் விட்டி விகிதத்தை உயர்த்துவது கட்டாயமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ 58.80 மற்றும் ரூ 59 என்ற நிலையில் உள்ளதால், கடன் தொகையிலும், வைப்பு நிதியிலும் விட்டி விகிதங்களில் கன்டிப்பான மாற்றம் தேவைப்படுகிறது, என்றும் கூறினார்.
மேலும் அவர், "அந்நிய செலாவணி சந்தையின் நிலையற்ற தன்மையிலும், வங்கி செயல்பாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியையும் சரி செய்ய ஆர்பிஐ கண்டிப்பாக உதவும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் 2013-14ஆம் நிதியாண்டின் Q2 முடிவுகளில், மொத்த லாபத்தில் 2.3 சதவிதம் அதிகரித்துள்ளது என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்தது.