Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
இந்திய போட்டி ஆணையம் (CCI) அரசு நடத்தும் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய போட்டி ஆணைக் குழுவின் சிறப்பு ஆலோசனை குழு (EPAG) நடத்திய மூன்றாவது கூட்டத்தில் அசோக் சாவ்லாவால் இது அறிவிக்கப்பட்டது.
தனது பிரத்தியேக உரிமையைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக பல்வேறு புகார்கள் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மேல் சுமத்தப்பட்டன. அண்மையில் மேற்கு வங்க மின்சார மேம்பாட்டு கழகம் எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களில் நியாயமற்ற நிபந்தனைகளைத் திணிப்பதாக கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மீது புகார் கூறியிருந்தது.
எனினும், இந்திய போட்டி ஆணைக் குழு எப்போது கோல் இந்தியா வழக்கில் தீர்ப்பை விரைவில் வழங்கும் என்பதை உறுதியாக கூற முடியாது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary