யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான நிதி நிலைக்குழு குறிப்பிட்ட வரி விகிதங்கள், வதிவிலக்குகள், விலக்குகள் , நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பான அம்சங்களை சரக்கு மற்றும் சேவை வரி (GST) மசோதா அடக்கும் வகையில் இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
"சேர்க்கப்படும் சட்டங்களும், விதிமுறைகளும் இந்திய அரசியலமைப்பின் தனி பகுதியாக இருக்க கூடாது. ஜிஎஸ்டி தொடர்பான தற்போதைய மசோதா, நிலைக் குழுவின் பார்வையில் நன்றாக வடிவமைக்கப்படவில்லை எனவே திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளது.
ஊடகத் தகவல்களின்படி, இந்த வரைவு மசோதா கைவிடப்பட்டு, பங்குதாரர்களுக்கு மத்தியில் ஏற்படும் வேறுபாடுகளை சமாளிக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் தர வேண்டும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது.