ரிசர்வ் வங்கியில் இருந்து வெளிவந்த கருத்துக்கள் மற்றும் வலுவான அமெரிக்க பொருளாதார தரவு ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது QE3 டேப்பரிங்க் வெகு தூரத்தில் இல்லை என்பது உறுதி.
"ஜூலையில் வேலையின்மை விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் விளைவாக, ரிசர்வ் வங்கியின் மாதாந்திர பாண்ட் கொள்முதல் அளவு $85 பில்லியனிலிருந்து பின்தங்கும் நிலை ஏற்படும்" என டல்லாஸ் மத்திய வங்கித் தலைவர் ரிச்சர்ட் ஃபிஷர் சமீபத்தில் கூறினார்.
செப்டம்பர் மாதத்தில், ரிசர்வ் வங்கியின் சொத்து கொள்முதல் திட்டம் அல்லது QE3 அளவு குறையகூடும் என பலர் விவதிக்கின்றனர். இதன் விளைவாக இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையும் என நம்பப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, QE3 டேப்பரிங்க் செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கலாம் என அச்சுறுத்துகிறது. இந்நிலை செப்டம்பரில் ஏற்படாவிட்டாலும், அக்டோபர் அல்லது டிசம்பர் மாதத்தில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக, பெரும்பாலான மத்திய வங்கிகள் பின்பற்றி வந்த எளிதான பணவியல் கொள்கை மற்றும் ஈஸி லிக்விடிட்டி கண்டிஷன்கள் தங்கவிலை உயர்விற்கு காரணமாகும்.
தி ஃபெடரல் ரிசர்வ் $85 பில்லியன் மாதாந்திர சொத்து கொள்முதலில், தங்கத்தை அதிகளவில் கொள்முதல் செய்துவந்த காரணத்தால், கடந்த 3 வருடங்களாக தங்கவிலை அதிகரித்து வந்தது.
சொத்து கொள்முதல் திட்டம் அடுத்த வருடத்தில் முற்றிலுமாக நீங்கிவிடும் சாத்தியம் தென்படுவதால், கண்டிப்பாக தங்கவிலையில் ஒரு மிகப்பெரியயளவில் வீழ்ச்சி ஏற்பட சாத்தியம் உண்டு.