சென்னை:ஹை ஸ்பீடு டீசல் (ஹெச்எஸ்டி) மீதான அண்டர்-ரெக்கவரி, தடாலடியாக லிட்டருக்கு 10.22 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜூலை 2013 இன் முதல் இருவார காலகட்டத்தின் போது, இது லிட்டருக்கு 9.29 ரூபாயாக இருந்துள்ளது.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருவதினால், எண்ணை வர்த்தக நிறுவனங்கள் டீசல் அண்டர்-ரெக்கவரிகளில் குறிப்பிடத்தக்க இழப்புகளை தாங்கிக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதிரடியாக டீசல் விலைகளில் ஒரே சமயத்தில் 3 ரூபாய் உயர்த்தப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
பிடிஎஸ் கெரோஸின் மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி ஆகியவற்றின் அண்டர்-ரெக்கவரிகள் மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. இப்பொருட்களைப் பொறுத்தவரையில், 2013 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்திற்கான அண்டர்-ரெக்கவரிகள் தலா ஒரு லிட்டருக்கு 33.54 ரூபாயாகவும், சிலிண்டர் ஒன்றுக்கு 412 ரூபாயாகவும் அதே அளவில் காணப்படுகின்றன.
ஓஎம்சிக்கள், 2013 ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் டீசல், பிடிஎஸ் கெரோசின் மற்றும் வீட்டு உபயோக எல்பிஜிக்களின் விற்பனை மீது தினப்படி அண்டர்-ரெக்கவரிகளின் கூட்டு செலவீனமாக சுமார் 389.00 கோடி ரூபாயைக் கொண்டிருக்கின்றன. இது 1.8.2013 -இலிருந்து 15.8.2013 வரையிலான இருவார காலகட்டத்தின் போதிருந்த 379 கோடி ரூபாய் தினப்படி அண்டர்-ரெக்கவரியைக் காட்டிலும் அதிகமானதாகும்.