"8.12 சதவிகிதம் அரசு பங்கு 2020" என்ற இந்த பங்குகளை ரூ.3,000 கோடிக்கு, ஏல முறையில் விற்பனை (மீள்-வழங்குதல்/ வழங்குதல்) செய்ய இருப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், "8.20 சதவிகிதம் அரசு பங்கு 2025" என்ற பங்குகளை ரூ.6,000 கோடிக்கும், "8.32 சதவிகிதம் அரசு பங்கு 2032" என்ற பங்குகளை ரூ.3,000 கோடிக்கும் மற்றும் "8.12 சதவிகிதம் அரசு பங்கு 2042" என்ற பங்குகளை ரூ.3,000 கோடிக்கும் அரசு விற்பனை செய்ய உள்ளது.
அரசு கடன் பத்திரங்களை ஏலம் விடும் போது, போட்டி இல்லா ஏலம் திட்ட அடிப்படையில், அறிவிக்கப்பட்ட பங்கு விற்பனைத் தொகையில் 5 சதவிகிதம் வரை சமந்தப்பட்ட தனியாருக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும்.
இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் நடத்தப்படும், போட்டி மற்றும் போட்டி அல்லாத ஏலக் கோரிக்கைகள் அனைத்தும் ஆகஸ்ட் 23, 2013குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த ஏலம் பற்றிய முடிவுகள் ஆகஸ்ட் 23, 2013 அன்று அறிவிக்கப்படும். வெற்றி பெற்ற ஏல நபர்கள் ஆகஸ்ட் 26, 2013 அன்று ஏலத்தொகைகளைச் செலுத்த வேண்டும்.