இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 3,000 கோடியாகும். T-90 டாங்குகள் முலம் ஏவப்படும் இந்த ஏவுகணைகள் லேசர் தொழில்நுட்பத்தை கொண்டு செயல்படுகிறது. மேலும் இந்த ஏவுகணைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அந்நிறுவனம் இந்திய ராணுவத்திற்கு வழங்கும். இத்தகைய ஏவுகணைகள் கண்டிப்பாக நம் இந்திய ராணுவத்திற்கு வலிமையை சேர்க்கும்.
இந்த ஏவுகணைகள் 5 கிமீ தொலைவில் இருந்து தாக்க வல்லமைப்படைத்தவை. இது எதிரிகளின் வெடிப்பு எதிர்விணை பாதுகாப்பு கவசம் பொருத்தப்பட்ட டாங்கிகளையும் வீழ்த்தக் கூடியவை.
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட், ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது இந்திய பாதுகாப்பு உற்பத்தி துறையின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனம் ரஷ்யவின் ரோஸ்போரோன் எக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து ஏவுகனைகளை தயாரிக்கிறது.