ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பீதியடைய தேவையில்லை!!: அரவிந்த் மாயாராம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: "ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து வருவதால் தேவையற்ற பீதி நிலவி வருகிறது, இக்கட்டத்தில் பயம் தேவை இல்லை" என நேற்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"தற்போது பகுத்தறிவற்ற தேவையில்லாத உணர்வு உள்ளது, தானாகவே அது சரியாகிவிடும். தொடர்ந்து ஒரே பாதையில் செல்வது மிகவும் முக்கியம். பீதியடைய எந்த அவசியமும் இல்லை" என பொருளாதார விவகார செயலாளர் அரவிந்த் மாயாராம் நிருபர்களிடம் கூறினார்.

இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 67.75 க்கு சரிந்ததை தொடர்ந்து செய்தியாளார்களிடம் அவர் பேசினார் அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மந்தம் அடைந்து வரும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மூலதன வெளியேற்றம் பற்றிய கவலைகள் காரணமாக ஏப்ரல் முதல் ரூபாயின் மதிப்பு 20 சதவீதக்கும் மேலாக குறைந்துள்ளது.

சிரியா - அமெரிக்க பிரச்சனை

சிரியா - அமெரிக்க பிரச்சனை

சிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தொடர்பான சாத்தியகூறுகள் தென்படுவதால் ஆசிய சந்தைகளில் எண்ணெய் விலை உயர்ந்ததின் விளைவாக ரூபாய் மதிப்பு இன்று கடுமையாக சரிந்தது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

நடப்பு கணக்கு பற்றாக்குறை

முதலீட்டாளர்களுக்கு உறுதி அளிக்கும் முகமாக, 2013-14 ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை (CAD) எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாகவே இருக்கும் என மாயாராம் கூறினார்.

"நடப்பு கணக்கு பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாகவே இருக்கும். நாங்கள் ஏற்கனவே நடப்பு கணக்கு பற்றாக்குறையில் மாற்றம் ஏற்படுவதை கண்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.

 

 

அந்நிய செலாவணி
 

அந்நிய செலாவணி

அந்நிய செலாவணியின் உள்வரவு மற்றும் வெளியேற்றத்தில் உள்ள வித்தியாசம் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2012-13 ஆண்டில் 88.2 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உயர்ந்தது. நடப்பு நிதி ஆண்டில் 70 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு குறைக்க அரசு எதிர்நோக்கியுள்ளது.

நாணய சந்தை

நாணய சந்தை

"நாணய சந்தையில் உள்ள வர்த்தகத்தை தடை செய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை" என மாயாராம் கூறினார். பொருளாதார வல்லுனர்கள் இதை பற்றி கூறுகையில் இந்த நடவடிக்கையின் முலம் வதந்தியை குறைக்கும் என நினைக்கின்றனர்.

ரூபாய் மதிப்பை உயர்த்த 10 செயல் திட்டங்கள்

ரூபாய் மதிப்பை உயர்த்த 10 செயல் திட்டங்கள்

தற்போது ரூபாயின் மதிப்பு அதன் உண்மையான மதிப்பை விட குறைவாக உள்ளது என்று நேற்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். மேலும் பொருளாதாரத்தை சரிவுப்பாதையில் இருந்து மீட்டெடுக்க, ஏற்றுமதியை ஊக்குவித்தல், உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல் போன்ற 10 செயல் திட்டங்களை சிதம்பரம் அறிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

'Irrational sentiment' impacting rupee value: FinMin

The Finance Ministry on Wednesday described the sharp fall in the value of the rupee as a reflection of "irrational sentiment" and said there is no need for panic.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X