சென்னை: ரஷ்யவின், பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் நடந்த ஜி20 மாநாட்டில் பொருளாதாரத்தில் தலைசிறந்த 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து பங்கேற்றனர். இதில் நம் பிரதமர் மன்மோகன்சிங்கும் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் உலக பொருளாதாரத்தை மேம்படுத்த பல முடிவுகள் எடுக்கப்பட்டது.
ஜி20 மாநாடு
இதில் முக்கியமாக அமெரிக்க பெடரல் ரிசர்வின் பத்திரம் வாங்குவதை குறைத்துக்கொள்ளும் திட்டத்தை (QE3) பற்றி விவதிக்கப்பட்டது. மேலும் இதில் கலந்து கொண்ட தலைவர்கள், "உலக பொருளாதாரத்தை மனதில் கொண்டு இத்திட்டத்தை திரும்பப் பெறுமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமவிடம் கேட்டு கொண்டனர்".
குவாண்டிடேட்டிவ் ஈஸிங்
அமெரிக்க பெடரல் ரிசர்வின் குவாண்டிடேட்டிவ் ஈஸிங் திட்டத்தின் விளைவாக, வளர்ந்து வரும் நாடுகளின் பங்கு சந்தை மற்றும் நாணயச் சந்தையின் நிலை அந்நாட்டின் வளர்ச்சியை கடுமையாக பாதித்துள்ளது.
மானிட்ரி ஈஸிங் திட்டம்
மேலும் கடந்த வெள்ளிகிழமை நடந்த கூட்டத்தில் ஒரு முக்கியமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் மானிட்ரி ஈஸிங் திட்டத்தின் விரிவுப்படுத்தப்பட்ட காலத்தில், ஏற்படும் அபாயம் மற்றும் எதிர்மறை விளைவுகளை தணிக்க தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
மானிட்ரி ஈஸிங் திட்டத்தில் திருத்தங்கள்
இது மட்டும் அல்லாமல் மத்திய வங்கி, மானிட்ரி ஈஸிங் திட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள் கவனமாகவும் தெளிவாகவும் செய்யப்பட்டு வருவதை குறிப்பிட்டது.